search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்கால்"

    • வாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகளால் கொசு தொல்லை அதிகமாகிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் சுமார் 185 மீட்டர் தொலைவில் புதிய கழிவுநீர் வாறுகால் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஒருநாள் கூட வாறுகாலில் கழிவுநீர் செல்லாத நிலையில் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. ஒழுங்கற்ற முறையில் வாறுகால் அமைக்கப் பட்டுள்ளதால் கழிவுநீர் சீராக ஓடாமல் தேங்குகிறது. மேலும் குப்பைகளும் சேர்ந்து கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையும் அமைந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் கொசுக்கடியால் அவதிப் படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே நரிக்குடி வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கழிவுநீர் வாறுகால் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடந்த 10-ந்தேதி வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி, நாச்சிகுளம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் கோரிக்கை விடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வாய்க்கால் வெட்டும் பணி நீர்வளத்துறையால் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பணிகள் குறித்து திருத்துறைப்பூண்டி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது.
    • வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி வட கிழக்கு பருவமழைக்கு முன் னெச்சரிக்கையாக மாநக ராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் னர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஊரணிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் கள் ஆகியவற்றில் தேங்கி யுள்ள ஆகாயத்தாமரைகள், தேவையற்ற குப்பைகள், செடி கொடிகள் உள்ளிட்ட வற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணை யாளர் பிரவீன்குமார் மாநக ராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களை கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மூன்று நாட்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வைகை ஆற்றுப் பகுதிகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், ஊரணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகள், மணல்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் மாநகராட்சியின் மூலம் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    • தூர்வாரும் பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.
    • ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே பன்னத்தெரு ஊராட்சியில் வேலையடி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.

    விவசாய சங்க செயலாளர் பிரபு, இயற்கை விவசாய சங்க தலைவர் வேனு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆஸ்திரேலியா தமிழர்கள் பொதுநல அமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    இதில் ஆஸ்திரேலியா பொது நல அமைப்பை சேர்ந்த நிர்மல்குமார், வக்கீல் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.
    • 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் பொதுப்ப ணித்துறை வென்னாற்று பிரிவு அலுவ லகத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    வேதா ரண்யம் தாலுக்கா தலை ஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறுவெண் மணச்சேரி வடபாதி வடிகால் பொன்னேரி வாய்க்கால் மேட்டுப்பள்ள வாய்க்கால் ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்ப டுகின்றன.

    இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்ப ணித்துறை பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
    • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோதண்டராஜபுரத்தில், ரூ.23 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிட பணிகள், விற்குடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் பணி, பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுரு கன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உடன் இருந்தனர்.

    • உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது.
    • அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தினசரி அன்னதானம் நடக்கிறது.

    குறிப்பாக சனிக்கிழமை அன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். அன்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி செல்வர்.

    இந்த நிலையில், இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    சாப்பிட்ட எச்சில் இலை மற்றும் மீதம் வைக்கப்பட்ட உணவு, பேப்பர் கப்புகள் அப்படியே தண்ணீரில் மிதந்து வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

    எனவே பாண்டமங்கலம் கோவிலில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது.
    • இந்த வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டன் ஆறு,நரிமணியாறு,ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால்கள் பாசன பிரிவு எண்-1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை உள்ளது. கிராமத்தில் இவ்வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பி டாகை,தண்டா ளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றது.

    இவ்வாய்கா லின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி,நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ள நீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

    எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படு கிறது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன்,திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன்,செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
    • கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது.

    பூதலூர்:

    தஞ்சை உள்ளிட்ட 11காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு ரூ 80 கோடிக்கு 4004 கிமீ நீரை 636 பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடி மதிப்பீட்டில் 1068.45 கிமீ தொலைவிற்கு நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடியில் 6 கோட்டங்களில் 189 பணிகள் மேற்கொள்ளப்படும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27.50 லட்சம் ஆகும். ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ளே பொக்ளின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அமைச்சர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்கு ஏதுவாக ஆனந்த காவேரி வாய்க்காலில் 100மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

    பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளிடம் கூறியதாவது. காவிரி டெல்டா 12 மாவட்டங்களுக்கு தூர் வாரும் பணிகளுக்காக ரூ90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    எல்லா வேலைகளையும் ரூ90 கோடியில் செய்ய இயலாது .எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை எடுத்து செயல்படுத்தப்படும். இங்கே தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஆனந்த காவேரி வாய்க்கால் தூர் வாரரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படஉள்ளது. தூர்வாரம்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள், இதற்கு மேலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.

    தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .அதனால் தாமதம் இன்றி விரைவாகவே பணிகள் நடைபெறும் .முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது என்று கூறுவது நியாயமானது.

    அதை சரி செய்வதற்கு என்ன வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுது கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமமுள்ளதாக விவசாயி ஒருவர் கேட்ட பொழுது இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த நாளில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார் என்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் , தலைமை கொறடா கோவி செழியன், எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், பூண்டி கலைவாணன் , அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர்சண் ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்.

    பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன்,மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தூர் வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க கண்காணிப்பு செயலியின் செயல் முறையை கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.

    ×