search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    X

    தஞ்சையில், இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    • குடமுருட்டி ஆறு மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.
    • ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வக்கீல் ஜீவக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றனர்.

    ஆனால் இதுவரை ஈரப்பதம் தளர்வு குறித்து குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. உடனடியாக ஈரப்பதம் தளர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    டயர் அறுவடை எந்திரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வரவழைக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் போது விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இம்முறை இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. எனவே உடனடியாக காவிரி டெல்டா விவசாயிகளிடம் அமைச்சர்கள் குழு நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவையாறு அருகே கோனேரிராஜபுரத்தை சேர்ந்த விவசாயி வீரராஜேந்திரன் அளித்துள்ள மனுவில் :-

    கோனேரிராஜபுரம் வருவாய் கிராமத்தில் குடமுருட்டி ஆற்று மூலம் பாசம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.

    இவைகளை உடனடியாக தூர் வார வேண்டும். குடமுருட்டி ஆற்றில் வாயிலாக பாசனம் பெறும் வாய்க்கால்கள் தலைப்பில் இருந்து கோனேக்கடுங்கால் ஆற்றில் சேர்வது வரையில் உள்ள வரைபடத்தை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பாசனதாரர் சங்கம் தலைவர் தங்கவேல் கொடுத்துள்ள மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து கதிர் அறுத்தும், அறுக்க முடியாமலும் நெல் மற்றும் வைக்கோல் வீணாகிவிட்டது.

    இது தொடர்பாக அரசு நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில்,

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகள் மழை சேத பாதிப்புகள் வருவாய்த்துறை அதிகாரி களை கொண்டு மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தூர் வாரும் பணியை தொடங்குவதால் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பதால் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெறுவதில்லை. எனவே தூர் வரும் பணியை எந்தெந்த வாய்க்கால் வெட்ட வேண்டும் என விவசாயிகளின் கருத்துக்க ளை கேட்டு உடனே தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    Next Story
    ×