search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத் தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொட ர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்க ளையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

    தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை யினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விதம், விநியோகிக்கப்படும் முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

    தென்றல் நகரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறிஞ்சி குழியி னையும், திருவள்ளுவர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மிதிவண்டி நிறுத்த கூடத்தையும், மருதுநகரில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.
    • ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரிபுதூர், வி.முத்து லிங்காபுரம், பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தம்ம நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தை களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய புதிய கட்டடப் பணிகளையும், கன்னிசேரிபுதூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டுள்ளதையும், அந்த பகுதியில் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    வி.முத்துலிங்காபுரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பாவாலி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்கப்பட்டுள்ள தையும், கூரைக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.15 மதிப்பில் நர்சரி கார்டன் மற்றும் கிணறு மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி, அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
    • ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்புச் செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில், தெக்கலூா் அங்கன்வாடி மையம், கிட்டாம்பாளையம் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம், நம்பியாம்பாளையம் மற்றும் ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

    அதேபோல, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் நஞ்சண்ணன்குட்டை பகுதியில் குளத்தை தூா்வாரும் பணி, நம்பியாம்பாளையம் ஊராட்சியில் ஆரம்ப சுகராதார நிலையத்தில் உள்ள மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருந்து இருப்பு ஆகியவை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமானப் பணி, ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமானப் பணி, ஈஸ்வரமூா்த்தி பூங்காவில் கழிவறை கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    பின்னா் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     உடுமலை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த வகையில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டடத்தினையும், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகம் கட்டடத்தினையும், பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் தூர்வாரும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:13 யூ.கே.சி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மையத்தினையும், தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

    உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி கண்ணமநாயக்கனூரில் ரூ.108.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் புனரமைக்கும் பணியினையும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.7 லட்சம் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பரி சாகுபடியையும், மொடக்குப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.444.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி (கிராம ஊராட்சிகள்), உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்
    • 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழி லாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் வேதியி யல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமையலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து தலைமையா சிரியர்களிடம் விவரம் கேட்கப்பட்டது.

    மாணவ, மாணவிகள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோதனை மேற்கொள்வ தோடு, ஒவ்வொரு நாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், ரூ.1.92 லட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடை மட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தோடு பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, ரூ.4.29 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையினையும் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    தொடர்ந்து, ஈசாந்தி மங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணி என யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
    • இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

    கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

    இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.

    • கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
    • பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் கலெக்டர் பார்வையிட்டார்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்பு சிலோன் காலனி வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியை பார்வையிட்டார். பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் பார்வையிட்டார்.

    பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் கட்டபொம்மன் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜன், தாசில்தார் நிஷாந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந் து கொண்டனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ் உள்ளனர். 

    • கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
    • ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்யப்பட்டன.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்வது.

    காங்கயத்தில் வணிகவரித்துறை அலுவலக கட்டிடம் கட்ட ராசி ஒன்றியத்திற்கு சொந்தமான 7½ சென்ட் நிலத்தை வழங்குவது. காங்கயத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றியக்குழு துணைதலைவர் ஜீவிதா ஜவ ஹர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகரன், ராகவேந்திரன் மற்றும் மின்சார வாரியம், வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×