search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு அலுவலர்"

    • பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மஞ்சினி ஓடையின் குறுக்கே ரூ.22.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும், சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தலைவாசல் தாசில்தார் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு எண் 15-ல் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டம் காட்டுவேப்பிலை ப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகள், சொட்டு நீர் பாசனம், பழ சாகுபடிகள் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காளாண் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொறுப்பு) யோகானந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி த்துறை) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவ மழை முன்னே ற்பாடு பணிகள், பள்ளி க்கல்வி த்துறை சார்பில் இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம்.

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமை ச்சர், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட ப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களு டன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலும் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிரா மஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடவேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நார ணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை -உழவர் நலத்துறை) வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) டாக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
    • வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகா ப்புத்துறை ஆணையர் லால்வேனா, அனைத்து துறை முதல்நிலை அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட த்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட ங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை அனைத்துப்ப குதிகளிலும் மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்ப ணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதிநிலை தொடர்பாக அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கை யாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவே ற்றுவதற்கான நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    குண்டடம் :

    ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஜோதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடங்கள் ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமானப்பணிகளையும், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப்பொருட்கள் குறித்தும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகளையும் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     உடுமலை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த வகையில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டடத்தினையும், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகம் கட்டடத்தினையும், பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் தூர்வாரும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:13 யூ.கே.சி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மையத்தினையும், தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

    உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி கண்ணமநாயக்கனூரில் ரூ.108.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் புனரமைக்கும் பணியினையும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.7 லட்சம் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பரி சாகுபடியையும், மொடக்குப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.444.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி (கிராம ஊராட்சிகள்), உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.

    அப்போது திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

    கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.
    • காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் - கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வட சின்னாரி பாளையம் ஊராட்சி காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னங்காளி வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , வீணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு , காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் வினீத் உடனிருந்தார். 

    ×