search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடங்கபட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அடிக்கல் நாட்டினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.76.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தா.பழூர் , இடங்கண்ணி ஊராட்சியில், இடங்கண்ணி-குறிச்சி சாலை வரை மாண்புமிகு முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.53.59 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி வெட்மிஸ் தார் சாலையாக மாற்றும் பணி, அதனைத் தொடர்ந்து வாழைக்குறிச்சி ஊராட்சி, மதனத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

    வாழைக்குறிச்சி ஊராட்சியில், ரூ.15.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ).முருகண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    திருப்பூர்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.'கள ஆய்வில் முதலமைச்சா்' என்ற திட்டத்தின்கீழ் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு முதல்வரே நேரில் சென்று திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதும க்களுக்குத் தேவையான குடிநீா் விநியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, பொது கழிப்பிட வசதி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா். ஆய்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

    புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டும் பணியையும், அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தும்பனம்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் மயானம் கட்டிடம் மற்றும் காத்திருப்போர் வளாகம், சுற்று சுவர் அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிநடைபெறுவதையும், புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணியையும், சணவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணியை யும், கற்காத்தகுடி ஊராட்சி யில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தும்பனம்காகோட்டை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வை யிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கூடுதலாக குடிநீர் வசதி ெசய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதல் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, செல்லம்மாள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பொறியாளர் திலீபன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் கேட்டறிந்தார்.
    • விவசாயிகள் நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்ப ட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார். பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) சண்முகம் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உதவிய இயக்குனர் தோட்ட கலைத்துறை அப்துல் லத்தீப் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சத்தியமூர்த்தி வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    • குற்றால அருவி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செயல் படுத்தப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2022- 2023-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

    ரூ. 11 கோடியில் வளர்ச்சி பணி

    அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அந்த வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது, தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோ சனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல் படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளி லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறு வார்கள் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொ றியாளர் சீனிவா சன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக்குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திர குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் யூனியனில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவி லைக்கடையையும், சிவஞானபுரம் ஊராட்சி சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள கட்டிட புதுப்பித்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பெரியபேராலி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.27.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரிய பேராலி ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு சுகாதார நிதியின்கீழ் பெரிய பேராலி ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காகித மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஊராட்சியின் மூலம் நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளி களுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார்.

    தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியாளர்களிடம் இதை நன்றாக சீரமைத்தால் உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியாளரும் உரிய அளவீட்டு பணியை நாள் ஒன்றுக்கு சரியாக மேற்கொள்ளும் பொழுது அதிகபட்ச ஊதிய தொகையை எளிதாக பெற முடியும்.

    பணியா ளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான ஊதியத்தை பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என தெரிவித்தார்.

    தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

    முதுகுளத்தூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் திடல் சிறையத்தேவன் ஊரணியில் ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர் ஆய்வு செய்து தரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி, பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, தேரிருவேலி ஊராட்சி மன்றத்தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
    • எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கூட்டு உள்ளுர் திட்டக்குழும பகுதிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் அண்ணா பல்கலைகழக தொழிற்நுட்ப வல்லுனர்களுடன், நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் முன்னிலையில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா மற்றும் துணைத்தலைவர் தாமல் ஆல்வா எடிசன் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் நிர்வாக தந்தையர்கள், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக சங்க பிரநிதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் அலுவல பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • காரியாபட்டி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம், சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.76லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கிராம நூலக கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தண்டியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு பழுதடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முடுக்கன்குளம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.65 க்ஷலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.56கோடி மதிப்பில் முடுக்கன் குளம்- காரியாபட்டி-நரிக்குடி சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், சூரனூர் ஊராட்சியில் தேனூர் பெரியகுளம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.73லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதகு மற்றும் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகளையும், சூரனூர் ஊராட்சி, தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.3.08 லட்சம் மதிப்பில் புனரமைக்கப் பட்டுள்ள 3 பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும், தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சண்முகப்பிரியா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×