search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம்"

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
    • மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.

    மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் குற்றாலத்தில் வந்து பிரசாதம் வழங்குவதற்காக சிப்ஸ், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழம் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைக்கவே அவர் குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

    இதன் தொடர்ச்சியாக 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு டன் பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பழங்களை ஊழியர்கள் உதவியுடன் அழிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    • மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

    தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்காசியின் முக்கிய சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுகளும் சாலை எங்கும் சென்றது. மேலும் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது. இன்று காலை வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

    • வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • வெள்ள பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவிலும் வெள்ள பெருக்கு குறைந்ததால் நேற்று மாலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினர்.

    • தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் அருவியில் தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் தென்காசியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    • அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது.
    • அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக ஆய்குடியில் 36 மில்லிமீட்டரும், தென்காசியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது. கடனா அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு மற்றும் அடவிநயினார் அணைகளில் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    இதேபோல் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், எட்டயபுரம், காடல்குடி, சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இரவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    • “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
    • இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.

    சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

    குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.

    அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.

    இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"

    போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.

    • மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
    • குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை பொழுதில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அவ்வப்போது ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஐந்தருவி மற்றும் மெயின்அருவி, பழைய குற்றாலத்தில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மற்ற இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஆறு, குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குற்றால அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    • அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
    • அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.

    • தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டத்தின் போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    இந்த சீசன் காலத்தில் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வார்கள். வார இறுதி நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதனையொட்டி சாலையோர கடைகள், அருவிக்கரைகளில் கடைகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து ரம்பூட்டான் உள்ளிட்ட ஏராளமான சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும்.

    இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    ஆனாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    குறிப்பாக இன்று காலை முதலே ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவற்றில் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் தான் எனவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் நீர்வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகிறது.

    இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.

    தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், இன்றும் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அவர்களை போலீசார் வரிசையில் நின்று பாதுகாப்புடன் குளித்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் வாகன நிறுத்தும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது. வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    அருவி பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் கூறுகையில், சீசன் காலங்களில் வந்து குளிப்பதற்காக நாங்கள் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் பொழுது அரசு விடுதிகள் மட்டுமின்றி தனியார் விடுதிகளும் நிரம்பி வழிவதால் தங்கும் அறைகளை தேடி சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் கூடுதல் தங்கும் விடுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றனர்.

    ×