என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூரில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்
- அரியலூரில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடங்கபட்டது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அடிக்கல் நாட்டினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.76.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தா.பழூர் , இடங்கண்ணி ஊராட்சியில், இடங்கண்ணி-குறிச்சி சாலை வரை மாண்புமிகு முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.53.59 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி வெட்மிஸ் தார் சாலையாக மாற்றும் பணி, அதனைத் தொடர்ந்து வாழைக்குறிச்சி ஊராட்சி, மதனத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
வாழைக்குறிச்சி ஊராட்சியில், ரூ.15.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ).முருகண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்