search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்யூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்
    X

    நெய்யூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×