search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேவர் பிளாக்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பரமக்குடி அருகே புதிய பேவர் பிளாக் சாலையை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள வேந்தோனி ஊராட்சிக்குட்பட்ட முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் சர்ச் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் வழிபாடு செய்வதற்கும், தேர் செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் விழா காலங்களில் தேர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    ஆகையால் சர்ச் முன் பகுதி மற்றும் தேர் செல்லும் பாதையில் சாலைகள் அமைத்துத் தருமாறு முத்துச்செல்லா புரம் கிராம மக்கள் முருகேசன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து முருகேசன் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதனை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிளை செயலாளர் சவரிமுத்து, இளைஞ ரணி அந்தோனிதாஸ், கிளை நிர்வாகிகள் உலகநாதன், மாரிமுத்து, மகளிர் அணி அல்போன்ஸ்சா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

    • சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகரசபைக்குட்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ள காயிதே மில்லத் இரண்டாம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகரசபை பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். பின்னர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×