search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி
    X

    பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார். 

    சங்கரன்கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி

    • சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகரசபைக்குட்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ள காயிதே மில்லத் இரண்டாம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகரசபை பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். பின்னர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×