search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
    X

    புதிய பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

    • பரமக்குடி அருகே புதிய பேவர் பிளாக் சாலையை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள வேந்தோனி ஊராட்சிக்குட்பட்ட முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் சர்ச் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் வழிபாடு செய்வதற்கும், தேர் செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் விழா காலங்களில் தேர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    ஆகையால் சர்ச் முன் பகுதி மற்றும் தேர் செல்லும் பாதையில் சாலைகள் அமைத்துத் தருமாறு முத்துச்செல்லா புரம் கிராம மக்கள் முருகேசன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து முருகேசன் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்து அதனை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிளை செயலாளர் சவரிமுத்து, இளைஞ ரணி அந்தோனிதாஸ், கிளை நிர்வாகிகள் உலகநாதன், மாரிமுத்து, மகளிர் அணி அல்போன்ஸ்சா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×