search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூட்டைகள்"

    • கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.

    காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.

    அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.

    அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது

    இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்

    தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.

    இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

    தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் நாட்கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
    • விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, மருவத்தூர், கரைமேடு, ஆலவேலி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக அடுக்கி வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தினமும் மிகக் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் கொள்ளப்படாததால் சுமார் 15 நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

    நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றன.

    இதன் காரணமாக விவசாயிகள் இரவு அங்கேயே தங்கி நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.

    உடனுக்குடன் கொள்முதல் மேலும் திடீர், திடீரென மழை வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதனால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆகவே, இந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்யவும், கொண்டு வரப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    • எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றிச்சென்றுவிட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன் மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாகைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, விழுந்தமாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த சத்தியமாலாவை சிகிச்சைக்கு நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், தப்பிய லாரி டிரைவர் ஜெகதீசனை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றி சென்றுவிட்டார்.

    இதையறிந்து விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி வேட்டைகாரணிருப்பு போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இதனால், நாகை- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • தண்ணீர் வரத்து அதிகமுள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்லணையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிேயார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசியதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.80 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல்அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாய கரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச்செல்லாமல் பெற்றோர்கள்தங்களது குழந்தைகளை பாதுகா ப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழுக்கள், வட்ட அளவிலான குழுக்கள், சரக அளவினால் குழுக்கள் முதல்நிலை பணியாற்றுபவர்கள், கால்நடை பராமரி ப்பாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மரம்வெட்டு பவர்கள், போதுமான ஜெனரேட்டர், கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையி ல்வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவா ய்த்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சார துறை மற்றும் அனைத்து துறைகளும்ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் பேரிடர்காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிகபாதுகாப்பு முகாம்அ மைக்கப்ப ட்டுள்ளது.

    மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைதயார்நிலையில் உள்ளது. பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும்தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப்எண். 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தினால்ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த்,வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குனர்ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
    • ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7868-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9959-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8600 -க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10109-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5100-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5900-க்கும் ஏலம் விடப்பட்டது.

    பரமத்திவேலூர் சந்தைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற போலீஸ் இன்ஸ்பெஸ்கடர் உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வாரச் சந்தைக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடை உள்ளது.

    இந்த இரும்பு கடை மிகவும் சிறியதாக உள்ளதால் விற்பனை செய்பவர்களிடம் வாங்கப்படும் பழைய இரும்பு மற்றும் பல்வேறு பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி தார் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைத்துள்ளனர்.

    இது குறித்து பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் அந்த வழியாக வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை பார்த்து கடைக்காரரிடம் உடனடியாக மூட்டைகளை அப்புறப்படுத்தி இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் சாலை ஓரங்களில் பொருட்களை போட்டு ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • தவுடு மூட்டைகளை இறக்கிய போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார்.
    • சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 72). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வடுகபாளையம் புதூரில் இருந்து தவுடு லோடு ஏற்றி கொண்டு தாளவாடிக்கு சரக்கு வேனில் சென்றார். வேனை அப்துல் பாசித்து என்பவர் ஓட்டி சென்றார்.

    தாளவாடி கொங்கள்ளி ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு சரக்கு வேனை நிறுத்தி அதில் இருந்து சுப்பிரமணியம் தவுடு மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×