search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற உத்தரவு
    X

    போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆய்வு செய்து அதை அகற்ற உத்தரவிட்டார்.

    சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற உத்தரவு

    பரமத்திவேலூர் சந்தைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற போலீஸ் இன்ஸ்பெஸ்கடர் உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வாரச் சந்தைக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடை உள்ளது.

    இந்த இரும்பு கடை மிகவும் சிறியதாக உள்ளதால் விற்பனை செய்பவர்களிடம் வாங்கப்படும் பழைய இரும்பு மற்றும் பல்வேறு பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி தார் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைத்துள்ளனர்.

    இது குறித்து பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் அந்த வழியாக வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை பார்த்து கடைக்காரரிடம் உடனடியாக மூட்டைகளை அப்புறப்படுத்தி இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் சாலை ஓரங்களில் பொருட்களை போட்டு ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    Next Story
    ×