search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Camping"

    • கமுதி அருகே மருதங்கநல்லூரில் நடந்த வாக்காளர் திருத்த சிறப்பு முகாமை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
    • வாக்காளர் சரிபார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருதங்க நல்லூர் கிராமத்தில், வாக் காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடை பெற்றது. இந்த முகாமினை முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், கட்சியின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான குழந்தைவேலு நேரில் பார் வையிட்டார்.

    மேலும் வாக்காளர் சரி பார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தேவன், நகரச் செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் உசிலம்பட்டியில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில், தொடர்ச்சி யாக கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ள வர்கள், கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

    மேலும் ஆண், பெண்க ளுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல், ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சி னைகளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சரஸ்வதி மஹாலிலும்,

    25-ந் தேதி திங்கட்கிழமை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையிலும் கருத்தரித்தல் முகாம் நடக்கிறது.

    முகாமில் பங்கேற்ப வர்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவச மாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 89258-01358 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக்கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விமானப்ப டைக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில், சாரண மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில், திருச்சி கேவி 1, கேந்திரிய வித்யாலயா கோல்டன் ராக் பள்ளிகளைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாம் நடைபெற்ற 2 நாட்களும் மாணவர்கள் அங்கேயே தங்கி, தாங்களாகவே தங்களின் வேலைகளை செய்து கொண்டனர்.

    மேலும், குகை வடிவமைத்தல், செடிகளை அலங்கரித்தல், பேச்சு, நடனம், பாடல், ஓவியம், காகிதக் கலை, தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக் கொள்வது, துணிகளை துவைத்துக் கொள்வது என மாணவர்களுக்கு தேவை யான வாழ்க்கைக் கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி கேந்திரிய வித்யாலயா, கோல்டன் ராக் பள்ளி ஆசிரியர்கள் பத்மா, ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பாதுகாப்பு கருவிகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    • கழிவுநீர் வாகனத்தை இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீரை எந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , தஞ்சை மாநகராட்சி, தூய்மை இந்தியா திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த பயிற்சி முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

    மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம் டாக்டர்கள் தமிழ்செல்வன், கோவிந்தன், முத்துசாமி, செல்வநாயகி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு எந்திரங்களை கொண்டு கழிவு நீர் அகற்றும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பணியிடங்களில் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் பேணுதல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது அணிய வேண்டிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இதில் கழிவுநீர் வாகனத்தை இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணிக்கு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் தனியா ர்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவா ய்ப்பினை பெற்றுக்கொ ள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சென்னை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள மாவட்ட மர சிற்பக் கலைஞர்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருக்ஷா - மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பயிற்சி முகாமில் தொடக்கி வைத்தார்.

    தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். இதில் ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா, தமிழ்நாடு தொழில், புத்தக நிறுவன திட்ட முன்னோடி செந்தமிழ் அரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மர சிற்பக் கலைஞர் சக்திவேல் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

    ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.

    ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.

    சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

    • தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் பகுதியில் தமிழக அரசின் கால்நடை பரா மரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர். மொத்தம் 315 கால்நடைகள் பயனடைந்தன.

    இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், சினை பருவத்தில் உள்ள பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்ட்ல கள் செய்யப்பட்டன.

    சினை பிடிக்காத கால் நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட் டது. 49 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

    மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை நாமக்கல் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நடராஜன், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண் பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், ஆவின் உதவி மேலாண் இயக்குனர்கள் டாக்டர் சின்னுசாமி மற்றும் டாக்டர் முருகுசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கபிலர்மலை கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் தனவேல், மணிவேல், செந்தில்குமார், சையது அஸ்லாம், ரமேஷ், ராஜ்குமார், சசிக்குமார் கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் மற்றும் துரைசாமி, செயற்கை முறை கருவூட்டல் பணியாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட கால்நடை மருத்து வக் குழுவினர் சிகிச்சை பணிகளை மேற்கொண்ட னர்.

    முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை இருக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலர் பழனி வேல், ராமசாமி மற்றும் இருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

    • அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
    • அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமார பாளையம் அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

    தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய அரசு உயிர்த் தொழில் நுட்பவியல் துறைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரிலுள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை, கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சுதீப் குமார். வேலூரிலுள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்காகக் கடைப்பிடித்திட வேண்டிய வழிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில் நுட்பவுரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார். ராமநாதபுர மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாமானது நாளை (28-ந்தேதி) அலங்காநல்லூர் வட்டாரம், முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சிணை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் கால்நடை பரிசோதனை, ஊட்டசத்து வழங்குதல், தீவனக் கன்றுகள் விநியோகித்தல் ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முடுவார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார்.
    • முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழகம் முழுவதிலும் நூறு இடங்களில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகளின் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி முகாமினை தொடங்கிவைத்தார்.

    முகாமில் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினார். இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மலர்விழி திருமாவளவன் பங்கேற்றனர். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அஜித்பிரபுகுமார் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    ×