search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public relations"

    • மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தனித்துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய்த்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த குறித்த தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவித்தனர். முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம், அ.திருவுடை யார்புரம் உள்வட்டம், முள்ளிரேந்தல் குரூப், அ.நெடுங்குளம் கிராமத்தில், வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தேளுர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் முன்னிலை வகித்தார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட நல தாசில்தார் சாந்தி, திரு வாடானை யூனியன் சேர்மன் முகமது முக்தார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கணிணி திருத்தம், விலையி ல்லா தையல் எந்திரம், விலையில்லா பேட்டரி மருந்து தெளிப்பான், காய்கறி விதைகள், மின்னணு குடும்ப அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

    வருவாய் துறை, பேரிடர் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை, உணவுப்பொருட்கள் வழங்கல் துறை, மின்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேளுர் பஞ்சாயத்து தலைவர் நன்றி கூறினார்.

    ×