என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- திட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் சூழ்ந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்புஅலுவ லரும், குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்இயக்குநருமான அமுதவல்லி அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்த ப்பட்டு வரும் பணி மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்க ளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு சமைக்கப்படும் உணவு தரம் உள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மயிலாடு துறை கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்