

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7868-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9959-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8600 -க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10109-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5100-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5900-க்கும் ஏலம் விடப்பட்டது.