search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசிபுரம்"

    • உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது.
    • நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சியில் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஒன்றியம் பிள்ளா–நல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றி–யம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்கா–ளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது.

    • ராசிபுரத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
    • ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7868-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9959-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8600 -க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10109-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5100-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5900-க்கும் ஏலம் விடப்பட்டது.

    ×