என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்
- குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் நாட்கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
- விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, மருவத்தூர், கரைமேடு, ஆலவேலி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக அடுக்கி வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தினமும் மிகக் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் கொள்ளப்படாததால் சுமார் 15 நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.
நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் இரவு அங்கேயே தங்கி நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.
உடனுக்குடன் கொள்முதல் மேலும் திடீர், திடீரென மழை வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே, இந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்யவும், கொண்டு வரப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்