search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.பெ.சாமிநாதன்"

    • ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
    • 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட்ட அதே கட்டிடத்தில் தற்போது வரை நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான போதுமான இடவசதி அந்த கட்டிடத்தில் இல்லாததால் விரிவான இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் புதிய கட்டிடம் கட்ட 18-வது வார்டில் ராக்கியாபாளையம் ராசாத்தாகுட்டை அருகே இருந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருசில கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே இடத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ரூ.3 .50 கோடி மதிப்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பில் 14-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி டவுன்சிப் பகுதியில் மண்சாலையை தார்சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாலும், தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் மூடப்படாமல், வரி வசூல் உள்பட ஒருசில பணிகளுக்காக அந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி தலைவர் குமார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், துணை தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி பொறியாளர் மணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், 18-வது வார்டு கவுன்சிலர் தங்கம் பூபதி, தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் மூர்த்தி உள்பட நகராட்சி தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன்,திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை வகித்து 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

    விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 74 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கரடிவாவியில் எஸ்.என்.எம்.எல். மேல்நிலை பள்ளியில் 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி வரவேற்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு,ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன், மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி, மற்றும் என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிற்பி செல்வராஜ், செம்மிபாளையம் திருமூர்த்தி, கீர்த்தி சுப்பிரமணியம், இளைஞரணி ராஜேஸ்வரன், மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது.
    • 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் வட்டாரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிந்த பணிகளை திறந்து வைத்தும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வருகிற 5ந் தேதி சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரால் காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 137 மாணவர்களுக்கும் 178 மாணவிகளுக்கும் என மொத்தம் 315 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,97,551 மதிப்பீட்டிலும், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 245 மாணவிகளுக்கு ரூ.12,23,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.பின்னர் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் முதல் பொங்கலூர் சாலையில் தொடங்கி குன்னாங்கல்பாளையம் ஆதிதிராவிடர் காலணி வரை ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், கணபதிபாளையம் ஊராட்சி எஸ்.ஆர்.சி நகர் பகுதியில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் தானியக்கிடங்கு கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்தும், அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.92.62 லட்சம் மதிப்பில் 13 வளர்ச்சி புதிய பணிகளை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.1 கோடியே 46லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் முடிந்த பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

    இந்தநிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முருகேஷன், பல்லடம் கூட்டுறவு கள அலுவலர் சுரேஷ்குமார்,ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் தேன்மொழி, பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும்.
    • அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும் . இதில் காய்கறிகளை வாங்க திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட செய்தித்துறை அமைச்சர் பொதுமக்களிடமும் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ஆகியவற்றையும் கேட்டறிந்தார் .

    இந்த ஆய்வின் போது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , மாவட்ட கலெக்டர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை அமைச்சர் வழங்கினார்.

    மங்கலம்

    திருப்பூர் மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த முப்பெரும் விழாவிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.விஸ்வலிங்கசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கவி, பெருமாநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்யா முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், ஊராட்சி மன்ற 9-வது உறுப்பினர் முகமது இத்ரீஸ், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரபிதீன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் எச்.ரபிதீன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி  :

    தமிழக செய்தித்துறை அமைச்சர்மு .பெ.சாமிநாதன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்துமுடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ச. பெரியபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48.9 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர்-விஜயமங்கலம் ரோடு முதல் விநாயகபுரம் வழியாக திருப்பூர் விஜயமங்கலம் ரோடு வரையிலும் சாலை மேம்படுத்தும்பணியினையும், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் ரூ.71.19 லட்சம் மதிப்பீட்டில்வாமலைக்கவுண்டன்பாளையம் முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்படுத்தும்பணியினையும், மொரட்டுப்பாளையம் ஊராட்சி அங்கப்பா நகரில் ரூ.10.90 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய ஆதிதிராவிடர் காலணியில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடக்கட்டிடம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தும், வெள்ளியம்பதி ஊராட்சியில் ரூ.26லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.171.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்பிரேமா ஈஸ்வரமூர்த்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×