search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வளர்ச்சி பணிகள்"

    • புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி  :

    தமிழக செய்தித்துறை அமைச்சர்மு .பெ.சாமிநாதன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்துமுடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ச. பெரியபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48.9 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர்-விஜயமங்கலம் ரோடு முதல் விநாயகபுரம் வழியாக திருப்பூர் விஜயமங்கலம் ரோடு வரையிலும் சாலை மேம்படுத்தும்பணியினையும், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் ரூ.71.19 லட்சம் மதிப்பீட்டில்வாமலைக்கவுண்டன்பாளையம் முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்படுத்தும்பணியினையும், மொரட்டுப்பாளையம் ஊராட்சி அங்கப்பா நகரில் ரூ.10.90 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய ஆதிதிராவிடர் காலணியில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடக்கட்டிடம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தும், வெள்ளியம்பதி ஊராட்சியில் ரூ.26லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.171.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்பிரேமா ஈஸ்வரமூர்த்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×