search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்குளி"

    • திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தைப்பூச தேர் திருவிழா.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

    29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.
    • தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி ஆர். எஸ் வழியாக திருப்பூருக்கு பஸ் சென்று வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.

    இதனால் ஊத்துக்குளி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சில பஸ்கள் ஊத்துக்குளிக்குள் சென்றன. இந்த சம்பவம் மேலும் தொடருமானால் புகார் அளித்து போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். இந்த தீயணைப்பு மீட்பு நிலையத்தில் 18 தீயணைப்பு வீரர்களும் ஒரு தலைமை அதிகாரியும் செயல்படுவார்கள்.

    நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் சத்யநாராயணன், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.


    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வருகிற 10 -ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், விஜி புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா், கத்தாங்கன்னி.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • ஓட்டலில் கடந்த 14 ந் தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர்.
    • சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 14 ந்தேதி 2வாலிபர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர். அந்த ஓட்டலில் உள்ள ராமாத்தாள் என்பவரிடம் உணவை பார்சல் செய்யுமாறு கூறிய வாலிபர்கள் திடீரென ராமாத்தாள் அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் நகைபறிப்பில் ஈடுபட்ட தேனி மாவடம் ஆண்டிப்பட்டி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குலவநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலு துரை ஆகிய 2பேரையும் ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர், திருநகர், ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் நாளை 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், கே.வி.ஆர்.நகர், மங்கலம் ரோடு, அமர் ேஜாதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாஜலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், கருவம்பாளையம், எஸ்.ஆர்.நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேேபால் ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அபாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூர், ஏ.கத்தாங்கண்ணி.

    செங்கப்பள்ளி துணை மின்நிலையத்திற்குட்பட்ட செங்கப்பள்ளி, விரும்மாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் நாளை 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • மாணவர்கள் பேரணியாக அணிவகுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஊத்துக்குளி ரோட்டரி சங்கம் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, ஊத்துக்குளி வட்டாட்சியர் சைலஜா மற்றும் ஊத்துக்குளி ரோட்டரி சங்கம் சார்பாக முன்னாள் துணை ஆளுநர் சண்முகசதீஷ், ஊத்துக்குளி ரோட்டரி சங்கத் தலைவர் சிவ சந்தோஷ், செயலாளர் மகேந்திரன், முன்னாள் தலைவர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் செயலாளர்கள் திருமூர்த்தி மற்றும் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஊத்துக்குளிக்கு மாணவர்கள் பேரணியாக அணிவகுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார்.

    • காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
    • மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை)காலை 9 மணி முதல் 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எழில் நகா், ஊத்துக்குளி ஆா்.எஸ்., செம்பாவள்ளம், வேலம்பாளையம், குள்ளாயூா், அணைப்பாளையம், சுப்பனூா், அருகம்பாளையம், முல்லைநாயக்கனூா், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டைக்கிணறு, தாசநாயக்கனூா், மாரநாயக்கனூா், குன்னம்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், மேட்டுக்கடை, ஏ.கத்தாங்கண்ணி, தொட்டிபாளையம், வயக்காட்டுப்புதூா், மானூா்,திம்மநாயக்கன்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, எஸ்பிஎன் பாளையம், கோவிந்தம்பாளையம்.

    • பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளது.
    • களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ் பகுதியில் மின்தடை செய்யப்படும்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ்.

    • நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
    • காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    திருப்பூர்:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    • நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
    • காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    திருப்பூர்: 

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×