என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
ஊத்துக்குளி பகுதியில் 10-ந்தேதி மின்தடை
- செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வருகிற 10 -ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், விஜி புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா், கத்தாங்கன்னி.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






