search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    ஊத்துக்குளி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை

    • பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.
    • தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி ஆர். எஸ் வழியாக திருப்பூருக்கு பஸ் சென்று வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.

    இதனால் ஊத்துக்குளி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சில பஸ்கள் ஊத்துக்குளிக்குள் சென்றன. இந்த சம்பவம் மேலும் தொடருமானால் புகார் அளித்து போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×