search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு
    X

    புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை  படத்தில் காணலாம்.

    ஊத்துக்குளியில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

    • தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். இந்த தீயணைப்பு மீட்பு நிலையத்தில் 18 தீயணைப்பு வீரர்களும் ஒரு தலைமை அதிகாரியும் செயல்படுவார்கள்.

    நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் சத்யநாராயணன், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×