என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீது"
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொம்மசாமி ( வயது 48 ). இவரது மனைவி செல்வி (43). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் செல்வி இருந்த பகுதிக்கு வந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் செல்வியிடம் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு பிரிவினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் சேர்ந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த செல்வி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு மேலாளராக பாஸ்கர் என்பவரும், ஊழியர்களாக களங்கானியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), புதன் சந்தையை சேர்ந்த கவின் (25) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த சக்திவேல் (30) என்பவ,ர் காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.
ஊழியர்கள் அந்த கேனில் டீசலை நிரப்பினர். அப்போது கேன் நிரம்பியதால் வேறு கேனை எடுத்து வருமாறு சக்திவேலிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த சக்திவேல், கேனில் இருந்த டீசலை அகற்றிவிட்டு மறுபடியும் புதிதாக டீசல் நிரப்புமாறு கூறினார்.
இதனால் அவர்களுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து சக்திவேல் தனது நண்பர்களை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். உடனே அங்கு வந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும், ஊழியர்களான ராம்குமார், கவின், பாஸ்கர் ஆகியோரை கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதில் காயமடைந்த ஊழியர்கள் நாமக்கல்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
- அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஓலையார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.
பின்னர் ராஜேந்திரனை மீட்டு செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வன அலுவலர் சுப்பராயன் தலைமையிலான வனத்துறையினர்,
கரடியின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியில் நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்.
- 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்( வயது 56). விவசாயி.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் (70). என்பவருக்கும் நிலப்பி ரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் மைத்துனர் இளங்கோ என்பவர் ஆறுமுகத்துக்கு சொந்தமான பாப்பன் தோட்டத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டி ருந்தார். அப்போது ஆறுமுகம் அவரது மகன் சங்கீத்குமார் ஆகியோர் டிராக்டர் களப்பையில் சிக்கிய புற்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த பழனிவேல், மருமகள் சங்கீதா, இளங்கோ டிராக்ட ரில் உழவு செய்வதை தனது செல்போனில் படம் பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாமனார் பழனிவேல், கணவர் செந்தில் ராஜா, மாமியார் பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கிடந்த புற்களை எடுத்து ஆறுமுகத்துக்கு சொந்தமான நிலத்துக்குள் வீசி உள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சங்கீத்கு மாரின் சட்டையை பிடித்து அவர் அணிந்திருந்த 2 1/2பவுன் செயினை செந்தில் ராஜா பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட ஆறுமுகத்தை கையில் வைத்திருந்த அரிவாளால் இடது கையை வெட்டியுள்ளார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து ஓடி வந்து இளங்கோ தடுத்தபோது அவரும் தாக்கப்பட்டார். இதையடுத்து காயம் அடைந்த 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பழனிவேல், அவரது
மகன் செந்தில் ராஜா, மருமகள்
சங்கீதா ஆகியோரை தீவிர மாக தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மீது தாக்குதல் நடத்தினர்.
- புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மல்லியக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செங்குகவுண்டர் என்கிற சாமியார் (வயது 72). இவர் கடந்த 5 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கடை போடாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும்கடை போட்ட செங்கு கவுண்டரிடம் குத்தகை தாரர்கள் விடு முறை நாட்களுக்கும் சேர்த்து சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலை யத்தில் செங்கு கவுண்டர் கொடுத்த புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- அரசு ஊழியர்களான 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சித்தர்கோவில் அடுத்த பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசமுத்து மகன் ராஜகணபதி (வயது 42). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு வந்து மனு கொடுத்தார்.
அதில், அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தார் ஒருவரும், தொழில் மையத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜகணபதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்தினார். இதன் எதிரொலியாக தற்போது இரும்பாலை போலீசார், அரசு ஊழியர்களான காந்தி தேசாய், சிங்காரவேலு ஆகிய 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த முருகன், வேல்முருகன், கந்தசாமி, பச்சியப்பன், கார்த்திகேயன், வெள்ளையதேவன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. 3 கடைகள் மீதும் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல் மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்படும், என்றனர்.
- காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- இதில் 75 நிறுவனங்கள் மீது வழக்கு பதவு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் தொழிலா ளா் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா ளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தொழி லாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படு வதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று வி டுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.
இதனை யடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமை யாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு பதியப்பட்டது.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
- பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.
பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்