search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்
    X

    நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியில் நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்.
    • 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்( வயது 56). விவசாயி.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் (70). என்பவருக்கும் நிலப்பி ரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் மைத்துனர் இளங்கோ என்பவர் ஆறுமுகத்துக்கு சொந்தமான பாப்பன் தோட்டத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டி ருந்தார். அப்போது ஆறுமுகம் அவரது மகன் சங்கீத்குமார் ஆகியோர் டிராக்டர் களப்பையில் சிக்கிய புற்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த பழனிவேல், மருமகள் சங்கீதா, இளங்கோ டிராக்ட ரில் உழவு செய்வதை தனது செல்போனில் படம் பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாமனார் பழனிவேல், கணவர் செந்தில் ராஜா, மாமியார் பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கிடந்த புற்களை எடுத்து ஆறுமுகத்துக்கு சொந்தமான நிலத்துக்குள் வீசி உள்ளார்.

    அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சங்கீத்கு மாரின் சட்டையை பிடித்து அவர் அணிந்திருந்த 2 1/2பவுன் செயினை செந்தில் ராஜா பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட ஆறுமுகத்தை கையில் வைத்திருந்த அரிவாளால் இடது கையை வெட்டியுள்ளார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து ஓடி வந்து இளங்கோ தடுத்தபோது அவரும் தாக்கப்பட்டார். இதையடுத்து காயம் அடைந்த 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பழனிவேல், அவரது

    மகன் செந்தில் ராஜா, மருமகள்

    சங்கீதா ஆகியோரை தீவிர மாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×