search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனங்கள்"

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளதை தொ டர்ந்து எனது தலைமையில் (மணிகண்ட பிரபு) தொழிலா ளர் உதவி ஆய்வாளர்களால் டெக்ஸ்டைல்ஸ், ஆயத்த ஆடைகள் மற்றும் இனிப்பு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் இரட்டை விலை குறித்து சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.

    முத்திரை இடப்படாத, தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்
    • 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்

    தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.

    இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
    • தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000- முதல் நிறுவ னத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நா டுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணிலும், 9442215972 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

    • இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.
    • வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

    திருப்பூர்:

    தேசிய விடுமுறை நாட்களில் இயங்கும் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். அல்லது மாற்று விடுப்பு வழங்கவேண்டும். இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.

    மே தினமான கடந்த 1ந் தேதி, அனுமதி பெறாமல் இயங்கிய நிறுவனங்கள் குறித்து, திருப்பூர் தொழிலாளர் துறை அமலாக்க உதவி கமிஷனர் (பொறுப்பு) செந்தில்குமரன் தலைமையில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதி கடைகள், வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 35 கடைகள், நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 23 நிறுவனங்கள், 38 உணவு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், 30 என 53 நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.
    • விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

    கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஏ .ஐ. சி .சி .டி. யூ. அகில இந்திய தலைவர் சங்கர், சி.பி.ஐ.எம்.எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசை தம்பி, மாவட்ட செயலாளர் கண்ணையன், ஏ.ஐ.சி.சி.டி.யூ சிறப்பு தலைவர் இரணியப்பன், மாநில தலைவர் சங்கர பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் தேசிகன் , மாநில தலைவர் அந்தோணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது.
    • நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பனியன் வர்த்தகம் நடக்கும் போது சி-பார்ம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் செலுத்திய வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது. நடைமுறை சிக்கலால் சி-பார்ம் வழங்குபவர், 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டது.

    கடந்த 2019 முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால் சி-பார்ம் பிரச்னை மறைந்தது. சிறு, குறு உற்பத்தியாளர்களும், முறையாக ஜி.எஸ்.டி., பதிவு செய்து வர்ததகம் செய்து வருகின்றனர். பழைய கணக்குகளை சரிபார்த்த வணிகவரித்துறை, சி-பார்ம் கொடுக்காமல் ஒரு சதவீதம் மட்டும் வரி செலுத்தியவர்கள், நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், சி-பார்ம் சமர்ப்பிக்காத நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு சதவீத வரியை செலுத்திவிட்டன. பல்வேறு காரணத்தால் சி-பார்ம் சமர்ப்பிக்க இயலவில்லை. அதாவது அரசுக்கு வழக்கமாக செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிட்டனர். எனவே சி-பார்ம் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர். 

    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.
    • தஞ்சையை சுற்றியுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக மாணவர் நல மையமும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமும் அஸ்கார்டியா பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மொழிப்புலத்தில் நடை பெறுகிறது.

    இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.

    இதில் தமிழ்ப் பல்கலை க்கழக மாணவர்களும், தஞ்சை யைச் சுற்றி யுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவ ர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    • ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது
    • அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்,

    ராம்கோ குரூப் பஞ்சாலை பிரிவை சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ், ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் (பெரு மாள்பட்டி), ராஜபாளையம் மில்ஸ் -பேப்ரிக் டிவிசன், ஸ்ரீவிஷ்ணு சங்கர் மில், ஸ்ரீராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில், ராஜபாளையம் டெக்ஸ்டைல் (சுப்பிர மணியபுரம்) ஆகிய நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் நடந்தன.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ, இயக்குநர்கள் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறு வனங்களின் இயக்குநர்கள் மற்றும் ராம்கோ குரூப் நூற்பாலைகளின் தலைவர் என்.மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் 15 வருடம் முதல் 40 வருடம் வரை சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் மற்றும் அதிக வருடம் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1226 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 41.93 லட்சம் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 2176 தொழிலாளர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராம்கோ குரூப் நூற்பாலைகளின் துணை தலைவர் (மனிதவளம்) என்.நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்கத் தலைவர்கள் என்.கண்ணன் (எச்.எம்.எஸ்.), ஆர்.கண்ணன் (ஐ.என்.டியூ.சி.), பி.கே.விஜயன் (ஏ.ஐ.டி.யூ.சி.), எஸ்.கிருஷ்ணசாமி (எஸ்.வி.எஸ்.எம். மில் யூனியன்) ஆகியோர் பேசினர்.

    உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டப்படுத்துதல் ஆகி யவற்றின் அடிப்படையில் எக்செல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், நூற்பாலைகள் தற்போது மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் ராம்கோ நிறுவனத்திற்கு என்று மதிப்பு உள்ளது. கடந்த முறை ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஜெர்மன் நாட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்தபோது, நல்ல தரம், குறித்த காலத்தில் டெலிவரி மற்றும் தொடர்ச்சியான சேவைகளை நாம் செய்து வருவதால்தான் நம்மிடம் வணிகம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள் என்றார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளை யம் மில்ஸ் துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன் மற்றும் அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.

    இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
    • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பாகவும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

    தஞ்சையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்சேவையா தலைமை வகித்தார். மாநில செயலாளர்சந்திரகுமார் அமைப்பு நாள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து கீழவாசல் கட்டுமான சங்க கொடியினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

    அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை புறநகர் பணிமனை, அரசு போக்குவரத்து கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சை நகர கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ. ஐ .டி. யூ. சி. அமைப்பு நாள் கொடியேற்றப்பட்டது.

    இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தலைவர் மல்லி ஜி.தியாகராஜன், அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாள ர்தாமரைச்செல்வன், பொருளாளர்ராஜமன்னன்,  

    • காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • இதில் 75 நிறுவனங்கள் மீது வழக்கு பதவு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொழிலா ளா் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா ளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின்போது, தொழி லாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படு வதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று வி டுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.

    இதனை யடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமை யாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு பதியப்பட்டது.

    • தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
    • 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்து தொடரும் பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இருப்பினும் தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதற்கு அச்சாரமாக பிரான்ஸ் நாட்டு வர்த்தகரிடமிருந்து, 2023ம் ஆண்டுக்கான கோடை காலத்துக்காக 1.75 லட்சம் எண்ணிக்கையில் ஆடை தயாரிப்பு ஆர்டர் திருப்பூருக்கு கிடைத்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு வர்த்தக முகமை நிறுவனம் பிரான்ஸ் வர்த்தகரிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு இந்த ஆர்டரை பெற்று தந்துள்ளது.ஆர்டர் வழங்கிய பிரான்ஸ் வர்த்தகரின் தர ஆய்வு குழுவினரான சில்வின் மார்ட்டின், எலிஸ் பெலாட், லாரா ஆகியோர் திருப்பூர் வந்து பின்னலாடை தயாரிப்பு பணிகள், துணி, ஆடையின் தரத்தை ஆய்வு செய்தனர்.

    இது குறித்து வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதி சசீதரன் கூறியதாவது:-

    வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவாக 2023 ம் ஆண்டு கோடைக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கியுள்ளனர். 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஸ்டைலுக்கும் வெவ்வேறு வண்ணம் என்கிற நிலை மாறி, ஒரு ஸ்டைலில் இரண்டு வண்ணங்களில் ஆடை தயாரிக்க கோருகின்றனர். இதனால் டிசைன்களை உருவாக்கும் செலவினம் குறைகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆடை விலையையும் சற்று உயர்த்தி வழங்குகின்றனர். எத்தகைய சூழலிலும் குழந்தைகளுக்கான ஆடை தேவை குறைவதில்லை என்றனர்.

    ×