தஞ்சையில், ஆலோசனை கூட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
தஞ்சையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தஞ்சையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஏ .ஐ. சி .சி .டி. யூ. அகில இந்திய தலைவர் சங்கர், சி.பி.ஐ.எம்.எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசை தம்பி, மாவட்ட செயலாளர் கண்ணையன், ஏ.ஐ.சி.சி.டி.யூ சிறப்பு தலைவர் இரணியப்பன், மாநில தலைவர் சங்கர பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் தேசிகன் , மாநில தலைவர் அந்தோணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com