search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Form-C"

    • வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது.
    • நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பனியன் வர்த்தகம் நடக்கும் போது சி-பார்ம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் செலுத்திய வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது. நடைமுறை சிக்கலால் சி-பார்ம் வழங்குபவர், 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டது.

    கடந்த 2019 முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால் சி-பார்ம் பிரச்னை மறைந்தது. சிறு, குறு உற்பத்தியாளர்களும், முறையாக ஜி.எஸ்.டி., பதிவு செய்து வர்ததகம் செய்து வருகின்றனர். பழைய கணக்குகளை சரிபார்த்த வணிகவரித்துறை, சி-பார்ம் கொடுக்காமல் ஒரு சதவீதம் மட்டும் வரி செலுத்தியவர்கள், நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், சி-பார்ம் சமர்ப்பிக்காத நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு சதவீத வரியை செலுத்திவிட்டன. பல்வேறு காரணத்தால் சி-பார்ம் சமர்ப்பிக்க இயலவில்லை. அதாவது அரசுக்கு வழக்கமாக செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிட்டனர். எனவே சி-பார்ம் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர். 

    ×