search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டம்"

    • ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாநில அள விலான கலைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட அளவில் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் வரு கிற 29-ந்தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

    இதில் முதலிடம் பெறும் குழந்தைகள் மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிக்கு ஜவகர் சிறுவர் மன்ற செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான கலைப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.7,500-ம், 3-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.5. ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளன.

    ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு திட்ட அலு வலரை 75981 01177 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
    • இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குழித்துறை, அக்.20-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

    இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்த

    னர்.

    • மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களில் தரிசனம் செய்தும், இளைஞர்கள் முதல் புதுமணத் தம்பதியினர், பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மங்குடி ரோடு, மீனாட்சி புரம், கலெக்டர் அலுவலக ரோடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.அனைவரும் குடும்பத் தோடு வந்து புத்தாடை களை எடுத்துச் சென்றனர்.

    தீபாவளி பண்டிகை யையடுத்து துணிக்கடை களில் புத்தம் புது கலெக் சன்கள் விற்பனைக்கு வந்தி ருந்தது. புத்தாடைகளை குடும்பத்தோடு வந்து எடுத்து மகிழ்ந்தனர். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து நாகர் கோவில் நகரில் வடசேரி, செட்டிகுளம், கோட்டார், மணிமேடை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை இரணியல் உள்பட மாவட் டத்தின் முக்கிய பகுதி களில் உள்ள அனைத்து கடை களிலும் இன்று பொது மக்களின் கூட்டம் அதிகமா கவே காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடைவீதிகளில் போலீசார் மப்டி உடைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    பிக்பாக்கெட் திருடர்கள் அதிக அளவு நாகர்கோவில் நகரப் பகுதியில் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக் கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் உட்பட அனைத்து பஸ்நிலையங்களிலும் பஸ்களில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தங்களது செயின் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

    பட்டாசு கடைகளிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.பட்டாசு கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கடை உரிமையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    பட்டாசுகள் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விட்டு கண்காணிப்பு
    • பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்கும், பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்கும் கடை வீதிகளில் அலை மோதி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டு தோறும், பண்டிகைக்கு முந்தைய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நாளை வடசேரி, அப்டா மார்க்கெட், மீனாட்சிபுரம், செட்டிகுளம்,கோட்டார் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று பொரு ட்களை வாங்குவார்கள்.

    இது போன்று அடுத்தடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.இதனால் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வணிக பகுதிகளிலும் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்கி செல்வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என 4 சப்-டிவிஷன்களிலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் காலை, இரவு என 2 சிப்டுகள் அமைத்து பாதுகாப்பு பணி செய்கின்றர்.

    முக்கிய தெருக்களில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படும். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்க ளின் உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழு வீச்சில் மேற்கொள்ள இருக்கி றார்கள். இப்போதே கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டங்களில் ஊருடுருவி கண்காணிப்ப தற்கு வசதியாக டிரோன் களை பறக்க விடவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா தலங்க ளான மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகளின் புகைப் படங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்களாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் புகுந்தால் காட்டி கொடுக் கும் வசதி கொண்ட தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தீபாவளிக்கும் அந்த நடைமுறையை பின்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடு படுவோரை பிடிக்க மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடை யில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழு வதும் தேவையான அனைத்து முன் ஏற்பாடு களையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் நிகழ்ச்சி
    • மாவட்ட வன அதிகாரி தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ளபுத்தளத்தில் உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி சிவ பிரியா, பால பிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ரஷ்யா, சைபிரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த உள்ளான், ஆளா உள்ளிட்ட பறவைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

    பின்னர் அந்த பறவை களை கலெக்டர் அரவிந்த், வன அலுவலர் இளைய ராஜா, பறவைகள் ஆராய்ச்சி யாளர் பாலச்சந்திரன் உள்ளி ட்டோர் பறக்க விட்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறு கையில், குமரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பற வைகள் அதிக அளவு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

    ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.இங்கு இருந்தும் பறவை கள் அங்கு செல்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற போது 170 வகையான 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சைபிரியா,ரஷ்யா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் கன்னியாகுமரி மாவட்டம் வருகின்றன. சூரிய ஒளி அடிப்படையில் இந்த பறவைகள் வருகிற நிலையில் தற்போது ஒளியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அவைகள், திசைமாறிச் சென்று கட்டிடங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரு வருடத்திற்கு 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொது மக்களுக்கு பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுக வேண்டுகோள்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 - 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 515 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே , கும்பப்பூ பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் 1 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் ( இ - சேவை மையங்கள் ) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள " விவசாயிகள் கார்னரில் " நேரிடையாக காப்பீடு செய்யலாம் . முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ - அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 225 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    காந்தி ஜெயந்தியொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார்.

    கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஆசாரிப்பள்ளம் போலீ சார் வசந்தம் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்வக்குமார் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களும் ரூ. 4400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த கண்ணன் என்பவரையும் தாமஸ் என்பவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்வதிபுரம் பகுதியில் மதுவிற்ற காந்திமதி நாதன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தக்கலை மார்த்தாண்டம் இரணியல் மற்றும் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களிலும் மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பாலமோரில் 19.4.மி.மீ. பதிவு
    • குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இரவும் மழை நீடித்தது.நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கோழிப்போர் விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 19.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.78 அடியாக உள்ளது. அணைக்கு 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 538 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணையின் நீர்மட்டம் 68.77அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1அணையின் நீர்மட்டம் 8.98 அடியாக உள்ளது. அணைக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 12 பெருஞ்சாணி 16.6 சிற்றாறு-1- 13.4 சிற்றார்- 2 -4.2 நாகர்கோவில் 6 பூதப்பாண்டி 3.2 சுருளோடு 18.4 கன்னிமார் 4.2 பாலமோர் 19.4 ஆணைகிடங்கு 2.4 குருந்தன் கோடு 6.4 அடையாமடை 3.2 கோழி போர் விலை6 முள்ளங்கினாவிளை 5.2 புத்தன் அணை-12.8

    குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.குளச்சல் முட்டம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. சூறைகாற்றும் வீசிவரு வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள் வள்ளல்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    • 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்தடுத்து உள்ளவர்களும் காய்ச்சலால் அவதிப்படும் நிலை உள்ளது.

    இந்த காய்ச்சல் பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஆஸ்பத்திரி களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரி கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் வழக்கமாக 1500 பேருக்கு மேற்பட்டோர் புற நோயாளி யாக வந்து மருந்து வாங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருந்து வாங்கி செல்கிறார்கள்.

    இதில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் ஆஸ்பத்திரியில் சிலர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கன்னியா குமரி, குளச்சல், குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலரின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன்படி நாகர்கோவில் கல்வி மாவட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பகுதிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தின் கீழ் குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகள் மற்றும் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தின் கீழ் கொல்லங்கோடு நகராட்சி மற்றும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தின் கீழ் குழித்துறை நகராட்சி பகுதிகள் மற்றும் மேல்புறம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

    அந்தந்த கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளி, நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்களும் அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நான்கு மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் அரசாணை எண் 151 -என்ற புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    அந்த அரசாணைபடி, மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில் பகுதியில் ஒரு கல்வி மாவட்ட அலுவலகமும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கென ஒரு மாவட்ட கல்வி அலுவலகமும் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.

    அரசின் இந்த முடிவு குமரி மேற்கு மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களை கொண்ட மார்த்தாண்டம் பகுதியை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது.

    இதனால் கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    எனவே குமரி மாவட்டத்திலுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    மேலும் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும். மேலும் குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிெராலி
    • கோவில்கள், தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு

    நாகர்கோவில்:

    கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது‌.

    இதைத்தொடர்ந்து மதுரை, சேலம், பகுதி களிலும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதை யடுத்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாது காப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். நாகர்கோவில் கன்னி யாகுமரி குளச்சல் தக்கலை சப் டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீசார் 2 ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். இன்று காலையிலும் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டி குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை உட்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட முக்கிய மான கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியா குமரியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிரா மங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை சோ தனை செய்தனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • இதுவரை 1933 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் Right to Education (RTE) யின் கீழ் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மாணவிகள் 8, 10, 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர். இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொருத்த மட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவி களுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    2021-2022-ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இந்த மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள். இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1933 கல்லூரி மாணவிகள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×