search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை போட்டி"

    • ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாநில அள விலான கலைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட அளவில் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் வரு கிற 29-ந்தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

    இதில் முதலிடம் பெறும் குழந்தைகள் மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிக்கு ஜவகர் சிறுவர் மன்ற செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான கலைப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.7,500-ம், 3-ம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.5. ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளன.

    ஒரு மாணவர் 3 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். போட்டி களில் பங்குபெறும் மாண வர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு திட்ட அலு வலரை 75981 01177 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×