search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவைகள்"

    • சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.

    இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.

    இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.

    • நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.
    • கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

    வேளச்சேரி:

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள், வாத்து இனங்கள் வந்து உள்ளன. குறிப்பாக நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்திற்கு கூடுதலாக பறவை இனங்கள் வந்து இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 130 பறவை இனங்களும், இந்த ஆண்டு 148 பறவை இனங்களும் வந்து உள்ளன.

    இதேபோல் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, பெரும்பாக்கம் சதுப்பு நிலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் விரிவாக்கம், போரூர் ஏரி, எண்ணூர் முகத்துவாரம், வண்டலூர் ஏரி, மடிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட 25 இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் அதிக அளவில் வந்திருப்பது கணக்கிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர்கள் கூறும் போது, நன்மங்கலம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது சென்னையில் முதன்முறையாக நீல நிற தொண்டை உடைய நீலத் தொண்டை நீல ஈ பிடிப்பான் பறவை இருப்பது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கணக்கெடுப்புக்காக 9 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் தட்டை வாயன் வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி வாத்து, ஊசிவால் வாத்து, நாமத் தலை வாத்து உள்ளிட்டவை பரவலாக காணப்படுகிறது என்றனர்.

    • சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.
    • 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட வனத்துறையின் சார்பாக வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஆகியோர்களுடன் இனைந்து 27, 28 ந்தேதி ஆகிய நாட்கள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

    அவ்வாறு நடந்து முடிந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில் தருமபுரி வனக்கோட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் மற்றும் கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்களில் 27 ஈர நிலங்களை அடையாளம் கண்டு, தேர்வு செய்து பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் 109க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பறவைகள் காணப்பட்டது. அதிலும், அழிந்து வருகின்ற இனமான சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கிளி, மயில், நாரை, கொக்கு, இரட்டை வால் குருவி, நீர் காகம், கழுகு, காகம், தூக்கனாங்குருவி, மீன்கொத்தி பறவை, நீர்கோழி, மைனா மற்றும் காட்டுக் காகம் ஆகியவை தோராயமாக 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது என மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, தெரிவித்துள்ளார்.

    • கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
    • 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.

    தொடர்ந்து வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 25 குழுக்களை சேர்ந்த 140 பேர் கணக்கெடுப்பு பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக அம்சங்கள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக கடந்த 27, 28-ந்தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சிகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அங்கு ஒருசில அரியவகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக 2 நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 60 இனங்களை சேர்ந்த 7234 நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன.


    இதுதவிர உக்கடம் குளத்தில் 2288, வாளையார் 1797, கிருஷ்ணாம்பதி 1387 ஆகிய நீர்நிலைகளில் அதிக பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது. மேலும் இருகூர், வேடப்பட்டி, நரசம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பறவை இனங்களின் சராசரி 54 முதல் 75 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்தாண்டு 20 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 9494 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பறவைகளின் எண்ணிக்கை 16069 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் நத்தைகுத்தி நாரை, கருந்தலை மீன்கொத்தி, நீர்க்கோழி, இந்திய காட்டு காகம், தவிட்டு குருவி, சின்னத்தோல் குருவி, வண்ணநாரை, செந்நாரை, நீலச்சிறகி, சிறு முக்குளிப்பான், தாழைக் கோழி, வெண்கழுத்து நாரை, வயல்கதிர் குருவி போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் நிலப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்பு பணி வருகிற மார்ச் மாதம் 1,2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
    • பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் குடிதாங்கிகுளம், பத்மநேரி குளம், கங்கணாங்குளம், சிங்கிகுளம் மற்றும் பச்சையாறு அணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.

    கணக்கெடுப்பு பணியுடன் பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குளங்களில் கழிவுநீர் கலப்பதால் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாகவும், குழுவினர் தெரிவித்தனர்.

    கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
    • பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    உடுமலை:

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. 

    • கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும்.
    • ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.


    கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய பல பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பதை பல தருணங்களில் நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். ஆனால், இந்தக் கொடையை தக்கவைத்துக் கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை அழிப்பதற்கான செயல்கள் தான் அதிக அளவில் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

    கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன.
    • உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணலியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய்கழிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து முகத்துவாரத்தில் கடலில் பரவியது. மேலும் வெள்ளத்தின் போது வீடுகளிலும் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இந்த எண்ணெய்கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    அதனை வனத்துறையி னர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய்கள் 'பிரஷ்' மூலம் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டன.

    இதற்கிடையில் எண்ணெய் கழிவால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுவதும் நல்ல நிலையில் உள்ள அந்த பறவைகள் காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளது.

    எண்ணூர் கடல் பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் எண்ணெய்கழிவின் பாதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் மேலும் பல பறவைகள் பாதிக்கப்பட்டு காட்டுப்ப குதி மற்றும் நீர்நிலையில் இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து கொசஸ் தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் எண்ணெய்கழி வில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. கடந்த வாரத்தில் எங்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட 11 பறவைகளை நேப்பியர் பாலம் மற்றும் அடையாறு ஆற்று ஓரத்தில் கண்டனர்.

    இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனினும் பறவைகள் கண்காணிப்பு மேலும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்றார்.

    • எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது.
    • எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் புயல் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக எண்ணூர் முகத்துவார பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் தேங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளன.

    கடந்த 10-ந் தேதி முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிவுக்கு வந்து உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழக அரசின் சுற்றுச் சூழல் துணை செயலாளர் சுப்ரியா சாகு, எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் தேங்கிய பகுதிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் ரெட்டுக்குப்பம் பகுதியில் நடை பெற்ற ஆய்வுக் கூட் டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

    பின்னர் சுப்ரியா சாகு இதை தொடர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எண்ணூர் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் 4 பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை உள்ளூர் மீனவ மக்களின் துணையுடன் சுமார் 900 பேர் மேற்கொண்டனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான மாநில குழுவினர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது.

    128 படகுகள், 7 ஜே.சி.பி., 2 டிராக்டர்கள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    இப்படி எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சுற்றுச் சூழல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் முகத்துவார பகுதிகளில் சிறிய அளவில் தேங்கி காணப்படும் எண்ணெய் கழிவுகளை தொடர்ந்து தாங்களாகவே அகற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது. எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலிக்கான் பறவைகள் ஏராளமாக காணப்படும். இவைகள் தவிர மேலும் பல்வேறு வகையான பறவை இனங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

    எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள அவை யாத்தி காடுகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆய்வின் போது அவர்கள் கண்ட காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெள்ளை வெளேர் என காட்சி அளிக்கும் பெலிக் கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங்கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் பொலிவிழந்து காணப்பட்டன.

    இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்து உள்ளனர்.

    பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணெய் கழிவுகள் 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு உடலாக ஒட்டி காணப்படுகிறது. இப்படி எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ்வாகவே பறந்து செல்கின்றன.

    எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளால் ஏராளமான மீனவர்களும், கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன.

    இப்படி விஷமாகிப் போன மீன்களை ஏதும் அறியாத பறவை இனங்கள் சாப்பிட்டுள்ளன. பின்னர் அந்த மீன் உணவுகள் ஒத்துப் போகாமல் பறவைகள் வாந்தியும் எடுத்துள்ளன. இந்த காட்சிகளையும் வனத் துறையினர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    எண்ணெய் கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, விஷமாகிப் போன மீன்களால் உடல்நிலை பாதிப்பு என பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அவை யாத்தி காடுகளில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

    • வெளிநாடுகள்-பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன.
    • கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேட்டங்குடி பறவை கள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணால யத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் 5 மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசிவால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.

    தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இதுகுறித்து வன அலுவலர் தெரிவிக்கையில். பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகைபுரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்குமிடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது. மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்றார்.

    சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற வற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதக மான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர். கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்த இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வரு கிறது என்பது குறிப்பி டத்தக்கது.

    • அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
    • அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது.

    தொடர்ந்து பெய்த மழை காரணமாக பள்ளிக்கரணை சதுப்புநில ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் வெளிநாட்டு பறவைகள் பள்ளிக்கரணை ஏரிக்கு வருவது வழக்கம். தற்போது ஏரியில் நீர் நிரம்பி காணப்படுவதால் பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. நீலச்சிறகு வாத்து, சாம்பல்லை, தட்டைவாயன், மஞ்சள் வாலாட்டி, கிருவைததாரா வாத்து உள்ளிட்ட பறவைகள் வந்து உள்ளன. முதல் கட்டமாக வரும் அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதேபோல் சிவப்பு கழுத்து பருந்து, விரால் அடிப்பான் பருந்து மற்றும் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு போன்றவைகளும் காணப்படுகின்றன. வெள்ளை வாலாட்டி, கொடிக்கால் வாலாட்டி ஆகியவை இன்னும் 10 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பறவைகள் நலஆர்வலர் ஒருவர் கூறும்போது, செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது. இவை எதிர்பார்த்த நேரத்தில் வந்து சேர்ந்து உள்ளன. வழக்கமாக ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் 72 புலம்பெ யர்ந்த பறவைகள் உட்பட 196 வகையான பறவைகள் கடந்த சில ஆண்டுகளாக வருவது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது என்றார்.

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    ×