search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breeding"

    • வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவாது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.

    இதேபோல் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாத இறுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி அட்மா திட்டத்தின் நிதியுதவியுடன் 6 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
    • அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.

    அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.

    அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.

    ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.

    பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீன்கள் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி: தடை காலத்துக்கு பின் கடலுக்கு சென்றனர் மீன்கள் வரத்து குறைவால் மீனவர்கள் ஏமாற்றம்
    • மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

    கடலூர்:

    வங்ககடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15 முதல், ஜூன்.14-ந் தேதிவரை கடலில் மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீன்கள் இனவிருத்தி செய்யும் என்ற நோக்கில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    எனவே இந்த தடைகாலத்தில் பைபர் மற்றும் கட்டுமர படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர். ஆழ்கடலில் மீன் பிடிக்ககூடிய விசை படகுகள் துைறமுக பகுதியில் ஓய்வு எடுத்தது. மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    எனவே கடந்த 15-ந் தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சுபஉப்பலவாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர். ஆனால் குறைந்த அளவு மீன்களே கிடைத்ததல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறை முகத்தில் மீன்கள் விலை அதிகமாக இருந்தது. குறிப்பாக 1 கிலே வஞ்சரம் மீன் ரூ.700 ல் இருந்து 1000 மாகவும், சங்கராமீன் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆகவும், பாறை மீன் ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக இருந்தது.

    மீன்பிடி தடைகாலத்தில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இன்று மீன்கள் வந்ததால் ஓரளவு விலை குறைவாக இருக்கும் என்று கருதி கடலூர் மக்கள் கடலோர பகுதிக்கு சென்றனர். ஆனால் மீன்கள் விலை உயர்வால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பல்லாரியில் கருத்தரித்த 2 வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில் பெண்கள் கலந்துகொண்டு நாய்களுக்கு மாலை அணிவித்து திலகமிட்டு வாழ்த்தினர்.
    பெங்களூரு:

    கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு வைபவம் நடத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், பெண்கள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்துவார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆசையாக வளர்த்த நாய்கள் கருத்தரித்ததை தொடர்ந்து வளைகாப்பு விழா நடத்தப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    பல்லாரி டவுன் அனந்தபுரா ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அந்த நாய்கள் வளர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில், பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும் பண்டு, சுவிட்டி என்ற பெயர்கள் கொண்ட 2 பெண் நாய்களும் கருத்தரித்தன. இதனால் அந்த நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்த சிலர் முடிவு செய்தனர்.

    அதன்படி, நேற்று முன்தினம் பள்ளியில் வைத்து பண்டு, சுவிட்டி நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். நாய்களுக்கு மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பெண்கள், நாய்களுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தினர்.

    மேலும் நாய்களுக்கு பிடித்த உணவுகள் படைக்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட அனைவருக்கும் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
    ×