search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டம்"

    • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    • பறவை காய்ச்சல் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    • ரூ.1¾ கோடி பொருட்கள் பாதுகாக்கப்பட்டன
    • தீயணைப்பு துறையினர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், கன்னியா குமரி, திங்கள்சந்தை, தக்கலை, குளச்சல், குழித்துறை, குலசேகரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தீ விபத்து நடந்தால் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குளங்கள் மற்றும் ஓடைகளில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதிலும் தீயணைப்பு வீரர்களின் பங்கு முக்கிய மாக உள்ளது.

    குமரி மாவட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 344 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீயை அணைத்ததின் மூலமாக ரூ.1.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதே நேரம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

    இதே போல கிணற்றில் தவறி விழுந்தது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது, குளத்தில் மூழ்கியது உள்ளிட்டவை தொடர்பாக 860 மீட்பு அழைப்புகள் வந்தன. அதில் உடனுக்குடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில் 111 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • 75 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • 142 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய 206 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 142 பேரின் வங்கிக் கணக்கு களை போலீசார் முடக்கி உள்ளனர்.கைது செய்யப்பட்ட 142 பேரில் 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்க ளையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.இந்த ஆண்டு 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடிதடி வழக்கில் 28 பேரும் பாலியல் வழக்கில் 7 பேரும் திருட்டு வழக்கில் 9 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் என மொத்தம் 75 பேர்குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

    102 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு வழக்குகளை பொருத்தமட்டில் மாவட்டம் முழுவதும் 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 352 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. 2 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் காணாமல் போன செல் போன்களை கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதான் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் 722 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.86 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் 1325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 696 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 17ஆயிரத்து 307 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1030 விபத்துக்கள் நடந்ததில் 1462 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 270 பேர் பலியாகி உள்ளனர்.

    • சிறப்பு பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்பு
    • புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நாகர்கோவில்:

    2023-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்டம் ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்த வர்கள் புத்தாண்டு வாழ்த் துக்களை பரிமாறிக் கொண் டனர்.

    சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையா தலைமையில் மருதூர் குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடந்தது.கொற்றிகோடு மீட் நகர் சி.எஸ்.ஐ. ஆலயம், எஸ்.டி. மங்காடுவாவறை சாரோன் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இன்று காலையில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் வீதிகளில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி யும் புத்தாண்டை வரவேற்ற னர். நண்பர்களும் உறவி னர்களும் ஒருவருக்கொருவர் இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்த நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக இருந்தது. இன்று காலை யில் சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் கடலில் கால் நனைப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கடற்கரை ஓரங்களில் குடும்பத்தோடு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். வீடுகளில் இருந்தபடியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
    • பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பொழியும் தொடர்மழை யால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளதால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக் கின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரமாக விளங்குவது ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழிலாகும். இந்த மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தோட்டங்கள் ஆரல் வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோர், அருமநல்லூர், சுரு ளோடு, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, கோதையார், வேளிமலை பகுதிகள், முட்டைக்காடு, அருமனை, மருந்துகோட்டை, குமாரகோயில், வட்டம், கல்குறிச்சி, இரணியல், புதுக்கடை, பாலமோர், காஞ்சாம் புரம் மற்றும் பல ஊர் பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தோட்டங்களில் பல நிலைகளில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.

    • 23-ந்தேதி முதல் நடக்கிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டேப்செட்கோ ) மூலம் தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.

    அதன்படி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 24-ந் தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 25-ந் தேதியும் , கல் குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும் , தோவாளை தாலுகா அலுவலகத்தில் 29- ந் தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . இந்த சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண் ணப்பிக்கும்போது சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப் பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு
    • இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுவும் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் 2 நாட்கள் குறைந்து காணப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் நேற்று மாலை மீண்டும் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர்வி ளையில் 55.2 மில்லி மீட்டரும் இரணியலில் 42 மில்லி மீட்டரும் குருந்தன்கோட்டில் 36.2 மில்லிமீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 41.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 69.68 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. இந்த நிலையில் காலை 9.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில், சாமிதோப்பு, கொட்டாரம் என பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலக பணிக்குச் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    • அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
    • உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் பல்வேறு துறைகள் மூலம் நடை பெற்று வரும் பணிகள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகிய வற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    வளர்ச்சி பணிகள் செயலாக்கத்தின் போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. தடைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குநர் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டா ட்சியர்சேதுராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
    • தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நட்டு ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதக்கிறது.

    இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.

    தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது.

    மீண்டும் புதிதாக செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இதன் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

    இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி'மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர்.

    குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    இதனால் இப்பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக குளச்சல் அருகே கோடிமுனை கிராமத்தில் ஒரு சில மீனவர்கள் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சிப்பி மீன் குறைவாகவே கிடைத்தது.நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். 100 சிப்பி மீன் ரூ.1000-க்கு விலை போனது. கடந்த 3 வருடமாக சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.தற்போது கோடிமுனை, இனயம் கிராமங்களில் மட்டும் சிப்பி எடுக்கும் தொழில் நடக்கிறது. பிற கிராமங்களில் சிப்பி எடுக்கும் தொழிலை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாகி உள்ளதால் கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    ×