search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை வீதி"

    • குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
    • அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று குழந்தையை மீட்ட னர். குழந்தையின் அழுகை யை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

    தொடர்ந்து குழந்தை யிடம் விசாரித்தபோது, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டீ.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் வலம் வந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பாத்திர கடையில் அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது. அங்கிருந்த பெற்றோரை அழைத்து அறிவுரை கூறிய சப்- இன்ஸ்பெக்டர், அவர்களி டம் குழந்தையை ஒப்படைத்தார்.

    • காற்றுடன் கோடை மழை ஒரு மணி நேரம் பெய்தது.
    • மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    பேராவூரணி:

    பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. கடந்த வாரம் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதி மற்றும் கொன்றைக்காடு, ஒட்டங்காடு, படப்ப னார்வயல், மணக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பேராவூரணியில் பதிவான மழை விபரம்:பேராவூரணி 10 மி.மீ, ஈச்சன்விடுதி 26 மி.மீ, ஆயிங்குடி 34.2 மி.மீ, நாகுடி 26 மி.மீ.

    • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிறிஸ்துமஸ் விற்பனை களை கட்டியது
    • குடில்கள் கட்டும் பணி தீவிரம்

    நாகர்கோவில்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண் டாடப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா விமர்சை யாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கிறிஸ் துமஸ் விழாவை கொண்டாடு வதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரங்கள் ஜொலிக்கிறது.கண்ணை கவரும் வகையில் ஸ்டார்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ குடில்களும் கட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளிலும் ஸ்டார்கள் விற்பனை அமோக மாக நடந்து வருகிறது. பல்வேறு விதமான ஸ்டார்கள் விற்பனைக்காக கட்டப் பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க புத்தாடைகள் வாங்க கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் நாகர்கோவில் நக ருக்கு புத்தாடைகள் வாங்க குவிந்திருந்தனர். இதனால் நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அலைமோதியது. செம்மாங்குடி ரோட்டில் பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து கடைகளில் புத்தாடைகளை எடுத்துச் சென்றனர். இதனால் அந்த சாலையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மணிமேடை கலெக்டர் அலுவலகம் வடசேரி பகுதியில் உள்ள கடை களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை யையொட்டி பலவிதமான புத்தாடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை களை விரும்பி வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் விதவிதமான கேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தது. பொதுமக்கள் கேக்குகளையும் ஆர்வமாக வாங்கி சென்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, செட்டிகுளம், அண்ணா பஸ் நிலையம் பகுதி களில் வாகனங்கள் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதைடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், இரணியல், தக்கலை, குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கடை வீதிகளில் கூட்டம் அதிக மாக இருந்தது.

    • பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
    • பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்து உற்சா கமாக கொண்டாடி வரு கிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செம்மாங் குடி ரோட்டில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்.

    செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அதிகமாக காணப் பட்டதையடுத்து அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந் தது. போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மீனாட்சிபுரம் வேப்பமூடு மணிமேடை கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடைவீதிகளில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. பட்டாசு கடைகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வாங்க குவிந்திருந்தனர்.பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    தீபாவளி பண்டிகை யொட்டி வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் குமரி மாவட்டத் திற்கு பஸ்களில் வந்தனர்.இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில்களிலும் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்கினார்கள்.

    தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முக்கிய சந்திப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தீபாவளி விற்பனை களை கட்டியது
    • போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் புத்தாடைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.இதனால் அந்தச் சாலையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.இதே போல் வடசேரி, கலெக்டர் அலுவலகம், மீனாட்சிபுரம் சாலைகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.இதையடுத்து போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர். கேமரா பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.போலீசார் ரோந்து சுற்றி வருவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், குளச்சல், தக்கலை பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்குவதற்கு இளைஞர்கள் ஏராளமானோர் வந்திருந்த னர். அவர்கள் பல்வேறு விதமான பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர் .நாகர்கோவில் நகரில் உள்ள பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் நகரில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட் டது. செட்டிகுளம் வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவித்தது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். குழித்துறை, இரணியல், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.நாகர்கோவில் டவுன் ெரயில் நிலையத்திலும் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    • புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்
    • தீபாவளியையொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

    தீபாவளி பண்டி கைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிக மாக காணப்பட்டது.நாகர்கோவில், செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    குடும்பத்தோடு ஏராள மானோர் புத்தாடை எடுக்க வந்திருந்தனர்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபாவளியை யொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு கடைகளிலும் பட்டாசு வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மார்த்தாண்டம், இரணியல், குளச்சல், அஞ்சு கிராமம், தக்கலை உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கடைவீதிகள் களை கட்டி இருந்தன.

    கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி னார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடைவீதிகளில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    • மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களில் தரிசனம் செய்தும், இளைஞர்கள் முதல் புதுமணத் தம்பதியினர், பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மங்குடி ரோடு, மீனாட்சி புரம், கலெக்டர் அலுவலக ரோடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.அனைவரும் குடும்பத் தோடு வந்து புத்தாடை களை எடுத்துச் சென்றனர்.

    தீபாவளி பண்டிகை யையடுத்து துணிக்கடை களில் புத்தம் புது கலெக் சன்கள் விற்பனைக்கு வந்தி ருந்தது. புத்தாடைகளை குடும்பத்தோடு வந்து எடுத்து மகிழ்ந்தனர். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து நாகர் கோவில் நகரில் வடசேரி, செட்டிகுளம், கோட்டார், மணிமேடை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை இரணியல் உள்பட மாவட் டத்தின் முக்கிய பகுதி களில் உள்ள அனைத்து கடை களிலும் இன்று பொது மக்களின் கூட்டம் அதிகமா கவே காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடைவீதிகளில் போலீசார் மப்டி உடைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    பிக்பாக்கெட் திருடர்கள் அதிக அளவு நாகர்கோவில் நகரப் பகுதியில் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக் கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் உட்பட அனைத்து பஸ்நிலையங்களிலும் பஸ்களில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தங்களது செயின் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

    பட்டாசு கடைகளிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.பட்டாசு கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கடை உரிமையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    பட்டாசுகள் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ×