search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமைப்பெண் திட்டம்"

    • 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது.
    • தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    திண்டுக்கல்:

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) தமிழக முதல்-அமைச்சரால் மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ.யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    தற்போது 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் ஆதார் எண், கைபேசி எண் (ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்), வங்கிக் கணக்கு எண், பள்ளி சேர்க்கை எண், கல்வி நிலை சேர்க்கை தேதி, கல்வி ஆண்டு, பாடநெறி காலம், படிப்பின் பெயர் ஆகிய விபரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்
    • வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் புதுமைப்பெண் திட்டமானது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந்தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் தாங்கள் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே விண்ணப் பக்க வேண்டும். கன்னியா குமரி மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிறுவ னங்களில் மேல்படிப்பு, தொழிற்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவியருக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் 1187 மாணவி யர்கள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஏழை, எளிய வர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், சில பெற்றோர்கள் பணியின் காரணமாக வெளியூரில் வேலைபார்ப்பதினால் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வளர்ப் பதினாலும், பள்ளி பரு வத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதினாலும் பெண் குழந்தைகளால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த முதல்-அமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தை களின் இடை கல்விநிற்றல் விகிதத்தைக் குறைப்பது மட்டுமல்லாது பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்ப டுத்தி அனைத்துத் துறை களிலும் மகளிரை முன் உதாரணமாக பங்கேற்கச் செய்யவும், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிக ரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப் பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப் பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6-ம் வகுப்பு முதல்

    12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்டு சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தி னால் அனைத்து மாணவி யர்களும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தகாலில் நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கிராமப்புற பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் பணிகள் முன்னேற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை செய்த முதல் - அமைச்சர் ஸ்டாலின், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் பட்டா மாறுதல், இணையவழி பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நில எடுப்பு செய்யப்பட்டுள்ள காலி மனைகளில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    • கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
    • புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்க ளாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட மாக தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாணவிகளுக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து தஞ்சையில் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம் இரண்டாம் கட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இதில் கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, புதுமைப்பெண் திட்டம் தொடர்பான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 2-ம் கட்டத்தில் 2473 மாணவிகள் முதல் தவணையாக பயனடைய உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்ப சூழ்நிலை, வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.
    • புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது.

    சென்னை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இடை நிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் 'புதுமைப்பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், ஆவடி சா.மு.நாசர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
    • சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ந்தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

    தற்போது, முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகள், மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

    மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை 1933 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் Right to Education (RTE) யின் கீழ் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மாணவிகள் 8, 10, 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர். இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொருத்த மட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவி களுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    2021-2022-ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இந்த மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள். இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1933 கல்லூரி மாணவிகள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
    • "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது.

    ஊட்டி

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கக் கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.

    நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் முதற்கட்டமாக அரசு கலைக்கல்லூரி ஊட்டி மற்றும் கூடலூர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    புதுமைப்பெண்கள் திட்டத்தில் பயன் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-

    மாணவி சுகாஷிணி:

    எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். நான் 6 -ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேலம் ஆட்டயம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.அதன் பின்னர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

    எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    . இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவி ஆர்.வர்சினி:

    நான் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்பொழுது பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.

    எனது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கிய, முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    • முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆணையை அமைச்சர் வழங்கினார்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா பல்லடம் அருகே அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முதல்கட்டமாக 609 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 க்கான ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2014 பேர் பயன் பெற கண்டறியப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 609 மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாணவிகளின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு அந்த தொகை அரசால் செலுத்தப்பட்டுவிடும். ஒரு பெண் உயர் கல்வி கற்பதின் மூலம் அக்குடும்பமே முன்னேற்றம் அடையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி அடையும், எதிர்கால சமுதாயம் மேம்பாடு அடையும் என்றார்.விழாவில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் , பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் அம்பிகா நன்றி கூறினார்.

    • புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    தென்காசி:

    முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் நேற்று பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்து உள்ளார். குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத மாணவிகளுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமையும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும். எனவே பெண் குழந்தைகளின் விருப்பத்தை ஆய்வுகளின்படி அவர்களது மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தனுஷ் குமார்எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஷகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா,தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, கடையம் செல்லம்மாள், செங்கோட்டை திருமலை செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் வெங்கட்ராம ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 375 மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான ஏ.டி.எம். கார்டுகள், புதுமைப்பெண் பெட்டகத்தை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தொழில் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

    இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். எனவே மாணவிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×