search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானியம்"

    • குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    கடலூர் மாவட்டத்தில் இறால் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் (2021-2022) மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டர் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 இலட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 இலட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவீதம் மானியம் ரூ. 5.60 இலட்சம் வழங்கப்பட உள்ளது. 

    எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை புவனகிரி (வட்டம்) கடலூர் (மாவட்டம்) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
    • கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தாராபுரம், திருப்பூர், உடுமலை உபகோட்ட வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆதார்கார்டு, வங்கிகணக்கு எண், போட்டோ ஆகியவற்றினை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய இயலாத விவசாயிகள்அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் உதவியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    மானியத்தொகை போக மீதம் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை அல்லது மின்னணு பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம். சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பவர்டிரில்லர் பெறப்பட்ட பின்னர் துறை அலுவலர்களால் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மானியத் தொகை, உரிய நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவிசெயற்பொறியாளர் தி.சந்திரன்- 9442529340, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ். சுந்தரராஜன்- 9865028152 ,உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் 9003930773 ஆகியோரின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
    • மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
    • பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது.

    மேலும் மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.

    இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 90 எண்களுக்கு ரூ .13.50 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    மின்மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மானியத்திற்கு விண்ணப்பித்திட விவசா யிகள் ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சாதி சான்றிதழின் நகல், ஆதித்திராவிட மற்றும் பழங்குடியினரை சேர்ந்தவராயிருப்பின் சிறு/குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், சம்மந்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கல், மின் இணைப்பு சான்றிதழின் நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஓரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15. கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் - 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட செயற்பொ றியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை- 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
    • பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     மூலனூர்:

    மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும்மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூன்று சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.

    மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும்.

    பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காளான் உற்பத்தி கூடம்அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை 9677776214, 9790526223 என்ற எண்களில் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 10 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த திட்டம் ராமநாத புரம் மாவட்டத்தில் ப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழிற்கடன்களுக்கு 30 சதவீதமும், அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம். தனிநபர், குழு தொழில்க ளுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர்களுக்கு 5சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrtp.org/citizenlog.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய லாம். விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி தொழில் சார் வல்லுநர்களிடம் பெறலாம்.

    இந்த திட்டம் குறித்த தகவல்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு 72004 36477 என்ற தொடர்பு எண்ணிலும், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு 90477 08040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டு வோம் திட்ட அலுவலகத்தை 9486745280, 8300098120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வல்லுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 50 சதவீத மானியம் வழங்கபடும்
    • மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில், மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் நுண்ணுட்டக்கலவை ஆகிய பொருள்கள் அடங்கிய மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், பசுந்தாழ் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    மொத்த இலக்கில் 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். சிறுதானிய தொகுப்பு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு ரூ.1,150 (50%மானியம்). பயிறுவகை சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1740 (50%மானியம்) எண்ணெய் வித்து சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4700 (50% மானியம்) கடந்த 2 ஆண்டுகளில் பயன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேற்கண்ட மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். ஓடிபி விவசாயிகளின் கைபேசிக்கு வரும். மேலும் விவரங்களுக்கு திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராமங்களின் பஞ்சாயத்துகளில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 2 விசை உழுவை (பவர் டில்லர்) அல்லது களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்கப்படும் என்பதை அடிப்படையாக கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொதுப் பிரிவில் விசை உழுவை (பவர் டில்லர்) (8 குதிரை திறனுக்கு மேல்) 23, சிறப்பு பிரிவில் 5 மற்றும் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) (5 குதிரைதிறனுக்கு மேல்) பொதுப்பிரிவில் 4 மற்றும் சிறப்பு பிரிவில் ஒன்று மானியத்தில் வழங்க ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் விசை உழுவையினை பொறுத்த வரை, சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்பு பிரிவு விவசாயிகளுக்கு ரூ.85 ஆயிரம் அல்லது விசை உழுவையின் மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.70 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். களை எடுக்கும் கருவியினை பொறுத்தவரை சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்புப் பிரிவு விவசாயி களுக்கு ரூ.63 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். சிறப்பு பிரிவு விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் 19 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் தேரே கால்புதூர், பஞ்சலிங்கபுரம், ராஜாக்கமங்கலம் வட்டா ரத்தில் புத்தேரி, ஆத்திக் காட்டுவிளை, மேல கிருஷ்ணன்புதூர், தோவாளை வட்டாரத்தில் தோவாளை, மாதவலாயம், கடுக்கரை, குருந்தன்கோடு வட்டாரத்தில் கக்கோட்டு தலை, முட்டம், மேல்புறம் வட்டாரத்தில் மாங்கோடு, விளவங்கோடு, முஞ்சிறை வட்டாரத்தில் விளாத்துறை, தூத்தூர், கிள்ளியூர் வட்டாரத்தில் முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, திருவட்டார் வட்டாரத்தில் செறுகோல், ஏற்றக்கோடு, தக்கலை வட்டாரத்தில் சடையமங்கலம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் விசை உழுவை அல்லது களை எடுக்கும் கருவி பெற சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், ஆதார் கார்டு நகல், சிறு, குறு விவசாய சான்றிதழ், சாதிசான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் பதிவு செய்வது கட்டாயமாகும். இத்திட்டம் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகே உள்ள வேளாண்மை பொறியியல் துறை, கோணம் தொழிற்பேட்டை உதவி செயற்பொறியாளர் மற்றும் அழகியமண்டபம் பனங்காலவிளை உதவி செயற்பொறியாளர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் ஊடு பயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், வாழை மற்றும் மரவள்ளியில் ஊடுபயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தோட்டக்கலை உபகரணங்களை நெகிழிக்கூடைகள் 40 சதவீத மானிய விலையில் 80 அலகு வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்ட தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் தொகுப்பு ரூ.450-க்கு 250 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பழச்செடி தொகுப்புகள் மற்றும் மாடித்தோட்ட தொகுப்புகள் திட்டத்–தில் பயன்–பெற www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், மற்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
    • பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப் பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.

    கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படு கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20-ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×