search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழச்செடிகள்"

    • வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது அனைவருக்கும் விருப்பமான விஷயம்.
    • ஒரு தொகுப்பில் மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா செடி உள்ளது.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவருக்கும் பழச்செடிகளை தங்களது வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது ஒரு விருப்பமான விஷயம். குறிப்பாக ஒட்டு செடிகளை வாங்கி நடவு செய்வது அனைவராலும் முடியாத காரியம். ஒட்டுச்செடியின் விலை கூடுதலாகவும் அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பழ தொகுப்பு தளை அரசு நிர்ணயித்த மானிய விலையில் வழங்குதல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு 547 பழச்செடி தொகுப்பு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வகையான பழச்செடிகள் அடங்கிய ஒரு தொகுப்பில் ஒரு மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா அடங்கிய தொகுப்பின் முழு விலை ரூ.200 ஆகும்.

    இதில் மானிய விலை ரூபாய் 150 நீங்களாக ரூ. 50-ஐ ஒரு ஆதார் கார்டு நகலுடன் செலுத்தி முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அல்லது tnhorticulture.gov.in என்ற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்து மானியம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 81.64 ஏக்கர் பரப்பளவில் பழ செடிகள் சாகுபடி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண்வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இத்திட்டத்தின்கீழ் முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில் ஆழ்துளை, திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் பழ மரங்களின் நீர் தேவைக்கு ஏற்றவாறும், விவசாயிகளின் பாசனபரப்பிற்கு ஏற்றவாறும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட 57 கிராமங்களில் ஏரியூர் வட்டாரம், தொண்ண குட்டஅள்ளி கிராமம் மற்றும் நாகமரை கிராமம், பென்னாகரம் வட்டாரம், வட்டுவனஅள்ளி கிராமம், நல்லம்பள்ளி வட்டாரம், மானியதஅள்ளி கிராமம், காரிமங்கலம் வட்டாரம், பிக்கனஅள்ளி கிராமம் ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகளை ஒருங்கி ணைத்து 5 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண்வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

    தரிசு நிலங்களை மேம்படுத்த அனைத்து தொகுப்புகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள 81.64 ஏக்கர் பரப்பளவில் தற்பொழுது வரை 32.76 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வரும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்து விவசா யிகள் தொடர் புடைய வேளாண் விரிவாக்க மையங்களிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ அணுகி பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மா,பலா, கொய்யா,எலுமிச்சை, நெல்லி,சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செடிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினை அணுகி பயன்பெறலாம் என்று கபிலர்மலை தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் ஊடு பயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், வாழை மற்றும் மரவள்ளியில் ஊடுபயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தோட்டக்கலை உபகரணங்களை நெகிழிக்கூடைகள் 40 சதவீத மானிய விலையில் 80 அலகு வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்ட தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் தொகுப்பு ரூ.450-க்கு 250 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பழச்செடி தொகுப்புகள் மற்றும் மாடித்தோட்ட தொகுப்புகள் திட்டத்–தில் பயன்–பெற www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், மற்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    ×