search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்ட 57 கிராம தரிசு நிலத்தில் பழச்செடிகள் சாகுபடி பணிகள் தீவிரம்
    X

    தருமபுரி மாவட்ட 57 கிராம தரிசு நிலத்தில் பழச்செடிகள் சாகுபடி பணிகள் தீவிரம்

    • மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 81.64 ஏக்கர் பரப்பளவில் பழ செடிகள் சாகுபடி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண்வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இத்திட்டத்தின்கீழ் முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில் ஆழ்துளை, திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் பழ மரங்களின் நீர் தேவைக்கு ஏற்றவாறும், விவசாயிகளின் பாசனபரப்பிற்கு ஏற்றவாறும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட 57 கிராமங்களில் ஏரியூர் வட்டாரம், தொண்ண குட்டஅள்ளி கிராமம் மற்றும் நாகமரை கிராமம், பென்னாகரம் வட்டாரம், வட்டுவனஅள்ளி கிராமம், நல்லம்பள்ளி வட்டாரம், மானியதஅள்ளி கிராமம், காரிமங்கலம் வட்டாரம், பிக்கனஅள்ளி கிராமம் ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகளை ஒருங்கி ணைத்து 5 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண்வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

    தரிசு நிலங்களை மேம்படுத்த அனைத்து தொகுப்புகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள 81.64 ஏக்கர் பரப்பளவில் தற்பொழுது வரை 32.76 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வரும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்து விவசா யிகள் தொடர் புடைய வேளாண் விரிவாக்க மையங்களிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ அணுகி பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×