search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானியம்"

    • மீனவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும்
    • வருகிற 15-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

    ருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என நடப்பு ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, 20 கிலோ நைலான் வலையினை ரூ.20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் தொகையில் 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதே போன்று ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பரிசல்களுக்கு 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக வழங்கப்படும்.

    உள்நாட்டு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு மீன்பிடி வலைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்க 3 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    மேற்படி திட்டத்தில், பயன் பெற விருப்பம் உள்ளவர்கள் திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பங்கள் உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள மீனவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை.
    • நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும்.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத் திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் வட்டாரத்திற்கு எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.115.7 லட்சம் பெறப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்படு வதுடன் மேலும், பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பருவமில்லாத காலங்கள் மற்றும் ஆண்டு முழு வதும் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருமான த்தை பெருக்கிட பாது காக்கப்பட்ட சூழலில் தக்காளி, வெள்ளரி, குடை மிளகாய் போன்ற காய்கறி பயிர்களை பயிர் செய்திட பசுமைக்குடில் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக்கூடிய பொருட்களால் கட்டமைக் கப்பட்ட கண்ணாடி வீடு போன்ற அமைப்பா கும். அங்கு தாவரங்கள் வெப்ப நிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்கின்றன. ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை. மேலும், சந்தை ஏற்ற இறக்கங்களின் சூழ்நிலை களுக்கு ஏற்றவாறு சரியான முறையில் திட்டமிடு தலின் மூலம் உரிய நேரத்தில் தோட்டக்கலைப் பயிர்க ளான காய்கறி மற்றும் பூக்கள் போன்ற பயிர்க ளை சாகுபடி செய்து விளை பொருட்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டலாம். 

    பாதுக்காக்கப்பட்ட சூழலில் விளைவிக்கப்படு வதால் விளைபொருட்கள் கூடுதல் தரத்துடனும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி காணப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் மற்றும் நீரில் கரையும் உரங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். நிலப்போர்வை பயன்படுத் தப்படுவதால் களைகளைக் கட்டுக்குள் வைப்பதுடன், நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும். ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளை கடைபிடிப்ப தால் மகசூல் 5 முதல் 10% அதிகரிக்கும். இத்திட்டத்தில் 1000 ச.மீ. அளவுள்ள பசுமைக்குடில் அமைத்திட 50% மானியத்தில் அதிகபட்ச மாக ரூ.4,67,500 வழங்கப்ப டும். பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்க ளது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ரிஷி வந்தியம் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு ரிஷிவந்தியம் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
    • தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதியதொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியைப் பன்முக ப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திருப்பூர் கிளை அலுவல கத்தில் (டிஐஐசி.,பில்டிங் , தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர் - 641603) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 21.8.2023 முதல் தொடங்கியது. 1.9.2023 வரை நடைபெறுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி .ஐ .ஐ .சி -ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டிமானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை புதிய தொழில்முனைவோர்- தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0421 - 4238567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.
    • இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஆமணக்கு சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தின உரையில் 2 பெரும் திட்டங்களை பிரதமர் அறிவித்தார்
    • மானிய விலையில் பிணையில்லாத கடன்கள் வழங்கப்படும்

    இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் விஸ்வகர்மா யோஜனா மற்றும் லக்பதி தீதி எனும் இரு பெரும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), புதிய மத்திய அரசாங்கத்தின் திட்டமான "PM விஸ்வகர்மா"-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    "நேற்று சுதந்திர தின உரையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதுமுள்ள 30 லட்சம் கைவினை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மானிய விலையில் பிணையமில்லாத கடன்கள் வழங்கப்படும். 2023-ல் தொடங்கி 2028 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு இதற்காக ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்காக 18 பாரம்பரிய வர்த்தகங்கள் சேர்க்கப்படும்" என இத்திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

    "பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றோடு 5 சதவீத சலுகை வட்டியில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவியும், இரண்டாவது தவணையாக ரூ. 2 லட்சம் வரை கடன் உதவியும் வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு உதவி, கருவிகள் வாங்க ஊக்குவிப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்" என்று இத்திட்டம் குறித்து மத்திய அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டு தயாரிப்பு கலைஞர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், காலணி தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள் ஆகியோர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    • வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
    • விண்ணப்பிப்பவர்கள் 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்தரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    50 சதவீதம் மானியம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்க ளுக்கு இருசக்கர வாகனங் கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி உள்ள நபருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி யாற்றியிருக்க வேண்டும். 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி

    குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வி தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப் பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தினை http://tenkasi.nic.in/forms என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்க ளுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி -627 811 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் பனை விதை, கன்றுகள் 100 சதவீதம் மானியம் கலெக்டர் அறிவிப்பு
    • விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர்கூறியிரு ப்பதாவது-

    தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இணைந்த மரமாக இருக்கிறது. நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணுக்கு உகந்த மரமாக உள்ளது. மேலும், அடி முதல் நுனி வரை பயன் தந்து பலருக்கு வாழ்வா தாரமாகவும் விளங்கு கிறது.

    எனவே பனை சாகுபடியை ஊக்குவி ப்பதற்காகவும், விவசாயி களின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதற்காகவும், நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயன டைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    • தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரும் முகாமினை நெல்லி க்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் சமையல் எண்ணெய் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரித்திட 2022-23 ஆம் ஆண்டு முதல் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான கன்றுகளை நடவு செய்யும் பொருட்டு எண்ணெய்ப்பனை சார்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்தி ட்டத்தினை திருக்க ண்டேஸ்வரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விவசாய நிலத்தில் எண்ணெய்ப்பனைக் கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்புகள் குறித்தும் மற்றும் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகி ருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி , துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை அருண், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.

    • வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.
    • ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்செல்வி அறிவுறுத்தலின் படி, தோட்டக்கலை அலுவலர் சோபியா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறியதாவது:-

    மாடித்தோட்டம் தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6 எண்கள் , தேங்காய் நார் கழிவுகள் 12 கிலோ , 6 வகையான காய்கறி விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 200 கிராம்,போஸ்போபாக்டிரியா 200 கிராம், ட்ரைக் கோடர்மாவிரிடி 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.

    இந்த தொகுப்பின் விலை ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .

    இந்த தொகுப்பினை பெற www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • ராமநாதபுரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
    • பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திட வும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமய மாக்கல் துணை இயக்கத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூல மாக செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. 2021-22 முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரை தேர்வு செய்யப்பட் டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவ சாயிகளுக்கு 162 எண்கள் பவர்டில்லர்கள் மற்றும் 10 எண்கள் பவர் வீடர்கள் என மொத்தம் 172 எண்கள் ரூ.143.16 லட்சம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் நிலப் பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச்சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறுது.

    மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல் லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார தனிநபர் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உதவி செயற்பொறியாளர், ராமநாதபுரம் அலுவலகத்தில் உள்ள கைபேசி எண் 9489152279 மற்றும் பரமக்குடி, நயினார் கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார தனிநபர் விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வைத்தார் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜய அமிர்தராஜ், தமிழரசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, ராமன், வேதை ராஜன், அலெக்சாண்டர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜசேகர், சவுந்தரராஜன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் விஜய் சாரதி, கோபி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் சுகந்தி நடராஜன் ஒப்பந்தக்காரர் பழனிவேல் கலந்து கொண்டனர்.

    • பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம்.
    • நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

    செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×