என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்கூரில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
- விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
- பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வைத்தார் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜய அமிர்தராஜ், தமிழரசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, ராமன், வேதை ராஜன், அலெக்சாண்டர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜசேகர், சவுந்தரராஜன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் விஜய் சாரதி, கோபி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் சுகந்தி நடராஜன் ஒப்பந்தக்காரர் பழனிவேல் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்