search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்- தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்- தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

    • வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
    • விண்ணப்பிப்பவர்கள் 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்தரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    50 சதவீதம் மானியம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்க ளுக்கு இருசக்கர வாகனங் கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி உள்ள நபருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி யாற்றியிருக்க வேண்டும். 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி

    குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வி தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப் பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தினை http://tenkasi.nic.in/forms என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்க ளுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி -627 811 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×