search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமைக்குடில்"

    • ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை.
    • நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும்.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத் திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் வட்டாரத்திற்கு எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.115.7 லட்சம் பெறப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்படு வதுடன் மேலும், பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பருவமில்லாத காலங்கள் மற்றும் ஆண்டு முழு வதும் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருமான த்தை பெருக்கிட பாது காக்கப்பட்ட சூழலில் தக்காளி, வெள்ளரி, குடை மிளகாய் போன்ற காய்கறி பயிர்களை பயிர் செய்திட பசுமைக்குடில் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக்கூடிய பொருட்களால் கட்டமைக் கப்பட்ட கண்ணாடி வீடு போன்ற அமைப்பா கும். அங்கு தாவரங்கள் வெப்ப நிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்கின்றன. ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை. மேலும், சந்தை ஏற்ற இறக்கங்களின் சூழ்நிலை களுக்கு ஏற்றவாறு சரியான முறையில் திட்டமிடு தலின் மூலம் உரிய நேரத்தில் தோட்டக்கலைப் பயிர்க ளான காய்கறி மற்றும் பூக்கள் போன்ற பயிர்க ளை சாகுபடி செய்து விளை பொருட்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டலாம். 

    பாதுக்காக்கப்பட்ட சூழலில் விளைவிக்கப்படு வதால் விளைபொருட்கள் கூடுதல் தரத்துடனும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி காணப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் மற்றும் நீரில் கரையும் உரங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். நிலப்போர்வை பயன்படுத் தப்படுவதால் களைகளைக் கட்டுக்குள் வைப்பதுடன், நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும். ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளை கடைபிடிப்ப தால் மகசூல் 5 முதல் 10% அதிகரிக்கும். இத்திட்டத்தில் 1000 ச.மீ. அளவுள்ள பசுமைக்குடில் அமைத்திட 50% மானியத்தில் அதிகபட்ச மாக ரூ.4,67,500 வழங்கப்ப டும். பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்க ளது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ரிஷி வந்தியம் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு ரிஷிவந்தியம் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×