என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி"
- தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
- போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
திருவட்டார்:
குலசேகரம் நாகக்கோடு பகுதியில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27), முதுநிலை பயிற்சி மயக்கவியல் துறை நிபுணராக 2-ம் ஆண்டு படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தாவின் அறை கதவு நேற்றுமுன்தினம் திறக்கப்படவில்லை.
இதனால் சக மாணவிகள் தகவல் தெரிவித்ததையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சுகிர்தா பிணமாக கிடந்தார். சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் போலீசாருக்கும், சுகிர்தாவின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர் ஹரிஷ் மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரிஷ், ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணி வரை போலீசார் சுகிர்தாவுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட னர். மேலும் சுகிர்தா சம்பவத்தன்று யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளனர். இதற்கிடையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது தந்தை சிவக்குமார் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பரம சிவம், ஹரிஷ், ப்ரீத்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணைக்கு பிறகு 3 பேரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
- 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
- வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் கீழப் பெருவிளை பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது 2 வடமாநில வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் வேகமாக சென்றனர். உடனே வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது நாய் தங்களை துரத்தியதால் ஓடியதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மாணவிகளை பின்தொடர்ந்து சென்றார்களா? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
- சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
- நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
- ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.
- திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி முத்து மாரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார்.
இதனால் முத்துமாரி தன்னுடைய தாய், தந்தை யுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (வயது14). இவர் சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டி லில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கியது. இதில் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் தொட்டிலில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- சாஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சல் :
கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சாஜி (வயது 33). இவர் அப்பகுதியில் கேன் குடிநீர் விநியோகம் செய்யும் ஒரு டெம்போவில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பெண்ணின் சகோதரி மகள் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று வீட்டில் அழுது கொண்டிருந்தார். சிறுமியின் தாயார் கேட்டதற்கு சாஜி தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினார்.
இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சாஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி பஞ்சாயத்தில் மீனங்குடி கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நீர் தேக்க தொட்டி உள்ளது.
நேற்று குடிநீர் வினியோ கம் செய்யப்பட்ட நிலையில் அதனை குடித்த பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மருத்துவ மனைக்கு வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து மருத்துவர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு தீவிரச் சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மீனங்குடி கிராமத்திற்கு சென்று பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மீனங்குடி கிராமத்திற்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி குடித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.
- 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
குளச்சல் :
திங்கள்நகர் அருகே உள்ள வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25. வெல்டிங் தொழிலாளியான இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் மாடியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மாடிக்கு வந்த சிறுமியின் அக்காள், அதனை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து பிரசாந்த் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரசாந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
- எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
- சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த வேணுகோபாலபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த அழகுமலை மகனான கார் டிரைவர் முத்து காமாட்சி (23), அவரது நண்பர்களான மூர்த்தி மகன் செல்வக்குமார் (23), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
வேணுகோபால பாண்டியனின் மகள் 16 வயதுடைய பிளஸ்1 மாணவியும், முத்து காமாட்சியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு சென்றும் முத்துகாமாட்சி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார்.
மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பெற்றோர்கள் பறித்துக் கொண்டனர். காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் தந்தையை கொலை செய்ய மாணவி முடிவு செய்துள்ளார். இதனை தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வேலை முடித்து தனியாக வந்து கொண்டு இருந்த இரும்பு வியாபாரி வேணுகோபால பாண்டியனை மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டி விட்டு முத்து காமாட்சி தனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். போலீசார் முத்துகாமாட்சியின் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவி அனுப்பிய குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய 3 பேர் மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மகள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது பிரதீப்புக்கு திருப்பூர் சாவக்காட்டுபாளையத்தை சேர்ந்த ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி சந்தியா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் சந்தியாவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு இருந்தபடி அவர் தனது காதலன் பிரதீப்புடன் செல்போனில் பேசி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சந்தியா கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் காதலர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- சந்திராயான்-3 நிலவில் தரை இறங்கியதை கரூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள்நேரில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்
- பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கல்லூரி மாணவிகள் நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
- விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
தோவாளை 4 வழிச்சா லையில் புதிதாக கிளா ஸ்கோ பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. அகத்தியர் முனி குழ ந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பேட்ரிக் சேவியர், பங்குதந்தைகள் பிரைட் (தேவசகாயம் மவுண்ட்), ஸ்டீபன் (குறு ம்பனை), புரூனோ (வட சேரி), கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகி யோர் அர்ச்சிப்பு செய்தனர். ஜாஷ்வா அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் மனோதங்கராஜ் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். டீசல் வினியோக எந்திரத்தை எச்.பி.சி.எல். மதுரை துணை பொது மேலாளர் செல்ல பிரபு திறந்து வைத்து முதல் விற்ப னையையும் தொடங்கி வை த்தார். அதனை குமரி விற்ப னை அலுவலர் டிம் ஜெ ய்ரூஸ் பெற்று க்கொ ண்டார். பெட்ரோல் வினி யோக எந்திரத்தை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். அதனை எச்.பி.சி.எல். மதுரை ரீடெய்ல் என்ஜி னீயரிங் தலைமை மேலாளர் சுரேஷ்குமார் பெற்று க்கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்கு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாக இயக்குனர் போஸ்கோ நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்