என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி
    X

    காயமடைந்த வேணுகோபாலபாண்டியன், கைதான மாணவியின் காதலன் முத்துகாமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் செல்வக்குமார், கண்ணப்பன்.

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி

    • எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
    • சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த வேணுகோபாலபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த அழகுமலை மகனான கார் டிரைவர் முத்து காமாட்சி (23), அவரது நண்பர்களான மூர்த்தி மகன் செல்வக்குமார் (23), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

    வேணுகோபால பாண்டியனின் மகள் 16 வயதுடைய பிளஸ்1 மாணவியும், முத்து காமாட்சியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு சென்றும் முத்துகாமாட்சி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார்.

    மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பெற்றோர்கள் பறித்துக் கொண்டனர். காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் தந்தையை கொலை செய்ய மாணவி முடிவு செய்துள்ளார். இதனை தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வேலை முடித்து தனியாக வந்து கொண்டு இருந்த இரும்பு வியாபாரி வேணுகோபால பாண்டியனை மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டி விட்டு முத்து காமாட்சி தனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். போலீசார் முத்துகாமாட்சியின் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவி அனுப்பிய குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய 3 பேர் மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மகள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×