search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மாணவிகளை பின் தொடர்ந்த வட மாநில வாலிபர்களால் பரபரப்பு
    X

    நாகர்கோவிலில் மாணவிகளை பின் தொடர்ந்த வட மாநில வாலிபர்களால் பரபரப்பு

    • 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
    • வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் கீழப் பெருவிளை பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது 2 வடமாநில வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் வேகமாக சென்றனர். உடனே வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது நாய் தங்களை துரத்தியதால் ஓடியதாகவும் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மாணவிகளை பின்தொடர்ந்து சென்றார்களா? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×