search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Student"

    • ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி முத்து மாரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் முத்துமாரி தன்னுடைய தாய், தந்தை யுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (வயது14). இவர் சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டி லில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கியது. இதில் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் தொட்டிலில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மாயமானார்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் அருகே சுப்புலட்சுமி நகரைச்சேர்ந்தவர் திருஞானசம்மந்தம். அவரது மகன் ஜஸ்வந்த், (வயது16). கம்பியம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தேர்வில் தோல்வி அடைந்தார். எனவே ஜஸ்வந்த் சோகத் தில் இருந்தார். அன்று வீட்டில் மாலை இருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்,மஞ்சள் நிற டீ சர்ட், கிரே கலர் லோயர் அணிந்திருந்தார். இது குறித்து திருஞானசம்மந்தம் புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.

    ×