என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜஸ்வந்த்
10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மாயம்
10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மாயமானார்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் அருகே சுப்புலட்சுமி நகரைச்சேர்ந்தவர் திருஞானசம்மந்தம். அவரது மகன் ஜஸ்வந்த், (வயது16). கம்பியம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தேர்வில் தோல்வி அடைந்தார். எனவே ஜஸ்வந்த் சோகத் தில் இருந்தார். அன்று வீட்டில் மாலை இருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்,மஞ்சள் நிற டீ சர்ட், கிரே கலர் லோயர் அணிந்திருந்தார். இது குறித்து திருஞானசம்மந்தம் புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.
Next Story






