search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர்"

    • வீடுகளில் கழிவுநீருடன் மழை நீர் புகுந்தது
    • மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 102.60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூ, ர் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழை பெய்தது.

    திருப்பத்தூர் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது திருப்பத்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிரம்பி தெருக்களில் ஓடியது. திருப்பத்தூர் பெரியார் நகர், கலைஞர் நகர் டி எம் சி காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம் போல் கழிவுநீர் தேங்கியது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றமும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    பெரியார் நகரில் உள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் போல் காட்சி அளிக்கின்றன.

    மழைக்காலங்களில் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது நகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று காரணமாக மாங்காய் தோப்புகள் மாங்காய்கள் உதிர்ந்தன. இதேபோன்று கரும்பு நிலங்களில் சாய்ந்தது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைகோடியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சந்தைக்கோடியூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது.

    மேலும் தாமலேரிமுத்தூர் மற்றும் மூக்கனூர் பகுதியில் கோவில் திருவிழாவில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது பலத்த மழை பெய்தது காரணமாக மேற்கண்ட இரண்டு இடங்களில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏலகிரி மலையில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆம்பூர் 5, ஆம்பூர் சர்க்கரை ஆலை 6, ஆலங்காயம் 20, வாணியம்பாடி 28, நாட்றம்பள்ளி 25, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதி 23, திருப்பத்தூர் 102.6, திருப்பத்தூர் மாவட்டத்தில் சராசரியாக 209 அளவு பதிவாகியுள்ளது.

    • அரிசி, சீனி மூடைகள் சேதம்
    • இடிமின்னலுடன் திடீர் கோடை மழை

    கன்னியாகுமரி:

    குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவரம்பு, திருவட்டார், பொன்மனை, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது.

    இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் கடும் வெயில் இருந்த நிலையில் சற்று வெப்பம் குறைந்தது. குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு அருகிலுள்ள ஒரு ரேஷன் கடைக்குள் திடீரென்று தண்ணீர் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து சாலையில் பாய்ந்த தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது.

    இது குறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்து ழைப்புடன் கடையிலிருந்த ரேஷன் மற்றும் சர்க்கரை அரசி மூடைகள் அங்கிருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த ரேசன் கடையில் சுமார் 160 மூடைகள் சர்க்கரை, அரிசி மூடைகள் இருந்த நிலையில் அவற்றில் சில மூடைகள், கடையில் தண்ணீர் புகுந்த காரணத்தால் நனைந்து சேதமடைந்தன. தற்போது குலசேகரம்-திருவரம்பு சாலையில் சாலை விரிவாக்கப்பணிகள் நடப்பதால் சாலையில் பாய்ந்த தண்ணீர் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்து அரிசி மூடைகள் சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இனிமேல் வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.

    இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின.
    • ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடி தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, கல்பாக்கம், வாயலூர், நெய்தவாயல், மெரட்டூர், கணியம்பாக்கம், வேலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுவாக்கம் பகுதி சீமாவரம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் குடிநீர் போர்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கடந்த 10 தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பல்வேறு ஊராட்சிகளில் இப்பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் தற்காலிகமாக ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத தண்ணீரால் பொது மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் கேன் குடிநீரை அதிக விலை கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
    • வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    • பரமக்குடி அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளை முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது.

    பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பரமக்குடி அருகே உள்ள கீழப் பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு, சூடியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களில் அள்ளி வெளியேற்றினர். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்யவேண்டும் என எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    • கரூர் நகரப் பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது
    • குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது.

     கரூர்:

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு லேசான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, சுங்ககேட், கரூர் ஜவகர் பஜார் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து வடிகால்களில் சென்றதோடு ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் புகுந்தது.

    • 3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை.
    • இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் மெதுவாக செல்கிறார்கள்.

    சென்னை:

    மழைக்காலங்களில் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் மிக மோசமாக ஒரு காலத்தில் பாதித்தது உண்டு. படகுகள் மூலம் மக்களை மீட்பது, தெர்மாகோலில் தற்காலிக படகுகளை செய்து அதில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் பயணிப்பது போன்ற காட்சிகள்தான் இருந்தது. இப்போது அந்த நிலை ஓரளவு தடுக்கப்பட்டாலும் மழைக்காலம் வந்தால் இப்போது பல தெருக்களில் தண்ணீர் தேங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

    இந்த ஆண்டு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அதற்குள் பல தெருக்கள் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தேங்கிநிற்கிறது.

    3-வது குறுக்குத்தெரு, 6-வது மெயின்ரோடு ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடந்த ஒரு வாரமாக தெருக்களில் மக்களால் நடமாட முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த தண்ணீரில் மெதுவாக செல்கிறார்கள்.

    இந்த பகுதியில் கழிவுநீர் எப்படி வெளியே வருகிறது என்பது பற்றி அந்த பகுதி வாசியான ஹரீஸ் என்பவர் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை வசதிகள் முழுமையாக இல்லை. தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக கழிவுநீர் டேங்குகள் அமைத்து லாரிகள் மூலம் அவ்வப்போது அகற்றி வருகிறார்கள். அதே நேரம் பல வீடுகளில் முறைகேடாக கழிவுநீர் குழாய்களை மழைநீர் கால்வாயுடன் இணைத்துள்ளார்கள். அதன் காரணமாக மழைக்காலங்களில் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறுகிறது.

    பல இடங்களில் வீடுகளில் செப்டிக் டேங்க் நிரம்பியும் கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலக்கிறது.

    ஏற்கனவே மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கிறது. அதைமுழுமையாக ஒருங்கிணைக்கவில்லை. ஒரே தெருவில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் வரை வேலை செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இந்த பணிகள் அரைகுறையாகவே செய்யப்பட்டுள்ளன. இதனால்தான் மழைநீரும் வெளியேற முடியாமல் கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதை முறையாக சீரமைக்காவிட்டால் இந்த நிலைமை சீராவது கடினம் என்றார்.

    பெரியார் நகர் விரிவு 2 மற்றும் 3-வது தெருக்களிலும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    பிரதான சாலையான மடிப்பாக்கம் சபரிசாலையில் ஏற்கனவே மெட்ரோ வாட்டர் பணிகள் செய்யப்பட்டு கல், மணல் போட்டு நிரப்பி இருந்தனர் ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே போடப்பட்டிருந்த அந்த இடத்தை மீண்டும் தோண்டி, புதிதாக மணல், ஜல்லி கொட்டி வேலை செய்கிறார்கள். தேவையில்லாத இந்த வேலையால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    • பார்பர் காலனி குடியிருப்பகுதியில் பெத்தான் பகுதியிலிருந்து வடிகால் மூலம் வாய்க்காலில் செல்லும் உபரிநீர் தேங்கி, பொதுசுகாதாரத்திற்கும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது.
    • காட்டுப்புத்தூரில் மழை நீர் சீராக செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணி நடை பெற்றது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதி வார்டு ஒன்றில் மேற்கு தவிட்டுப்பாளையம் பார்பர் காலனி குடியிருப்பகுதியில் பெத்தான் பகுதியிலிருந்து வடிகால் மூலம் வாய்க்கால் செல்லும் உபரிநீர் தேங்கி அதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்திற்கும், பொதுசுகாதாரத்திற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது.

    இதைத் தொடாந்து முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் ஆலோசனையின்படி பெத்தான் பாறை குட்டை மழையினால் கொள்ளவை தாண்டி வெளியேரிய உபரிநீர் வார்டு ஒன்றில் மேற்கு தவிட்டுப்பாளையம் பார்பர் காலனி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பெத்தான் பாறை குட்டை முதல் காட்டுப்புத்தூர் வாய்க்கால் வரை மழைநீர் வடிகாலினை தூர் வாரும் பணி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் நடை பெற்றது.

    பணியின் போது பேரூராட்சி மன்றதலைவர்சு.சங்கீதாசுரேஷ், துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ், 1-வது வார்டு உறுப்பினர் பா.சிவஜோதி பாலசுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் காவிரி உபரிநீர் திறந்து விட்டப்பட்டதால் இங்குள்ள ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் இருக்கும் குறுக்குப்பட்டி ஏரிக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதால் தண்ணீர் செல்ல உரிய பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நெடுஞ்சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக ஒரு நீர்வழி பாதையை உருவாக்கி தற்காலிக தீர்வு ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்களை அழைத்து ஓமலூர் தாசில்தார் தலைமையில், பொதுப்பணி துறைஅதிகாரிகளும் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது ஏரியில் இருந்து வெளியேறும் அனைத்து நீர் வழி பாதைகளையும் அளவீடு செய்து நிரந்தர நீர்வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறி பொதுமக்கள், பட்டாதாரர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றனர்.

    அதன்பிறகு உபரிநீர் நிறுத்தப்பட்டது. மழையும் குறைந்து போனது. ஆனால் நீர் வழிப்பாதை அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கி விட்டது. இரவு பெய்த கன மழையில் மீண்டும் ஏரியில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    இதனால் மழை நீர் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது. இந்த மழைநீர் தங்களது வீடு மற்றும் கடைகளில் புகாமல் இருக்க மக்கள் பொக்லின் எந்திரம் கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் கடைக்காரர்கள் இடையே ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் ஏற்கனவே நெடுசாலையில் பெருக்கெடுத்து ஓடியது போல் மீண்டும் திருப்பி விட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிபட்டு வருகின்றனர். 

    • சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
    • இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அருகே உள்ளவர்கள் அடைத்து உள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

    எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×